May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை

1 min read

Death penalty for man who sexually abused boy

18.2.2021

புதுக்கோட்டை அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுவன் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்ற நபர் கடந்த 2019-ம் ஆண்டு மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் டேனிஷ் படேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு நீதிபதி சத்யா தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் டேனீஷ் படேலுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்பவருக்கு 3 பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.