May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

திருச்சியில் மார்ச் 14ந் தேதி தி.மு.க. மாநாடு; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min read

DMK on March 14 in Trichy. Conference; MK Stalin’s announcement

19.2.2021

திருச்சியில் மார்ச் மாதம் 14ந் தேதி தி.மு.க. மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேனியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாநாடு

துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் எதையும் பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை.
துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 10 ஆண்டுகளாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. முதல்-அமைச்சர் கூடவே இருக்கும் ஓபிஎஸ் அவருக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார். துணை முதல்-அமைச்சர் யாருக்கும் உண்மையாக இல்லை. மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார். திருச்சியில் மார்ச் மாதம் 14ந் தேதி மாநாடு நடைபெறும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.