தமிழகத்தில் இன்று 452 பேருக்கு கொரோனா
1 min readCorona for 452 people in Tamil Nadu today
21.2.2021
தமிழகத்தில் இன்று 452 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 452 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,48,275 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 275 பேர் ஆண்கள். 177 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,12,585. மொத்த பெண்களின் எண்ணிக்கை 3,35,655. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35.
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 460 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 31 ஆயிரத்து 706 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் சென்னை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,460 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,109 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் 257 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 50,148 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் சென்னையில் 154 பேருக்கும், கோவையில் 45 பேருக்கும், திருநெல்வேலியில் 6 பேருக்கும், தென்காசி ஒருவருக்கும், தூத்துக்குடியில் ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில்…
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது.
நேற்று ( சனிக்கிழமை) மட்டும் 14,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை நாடுமுழுவதும் கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,91,651 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90 பேர் கொரோனாவுக்கு இறந்துள்னர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,302 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,667 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து நாடுமுழுவதும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,89,715 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 1,45,634 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைவர் என அழைக்கப்படும் நபர் இன்னும் அரசியலை கவனித்து கொண்டுள்ளார். வாய்ப்பு இருக்கிறது என் பின்னால் வாருங்கள் என நான் சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.