May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா; பழனியில் ஆசிரியர்கள் பாதிப்பு

1 min read

Corona for 467 people in Tamil Nadu today; Vulnerability of teachers in Palani

25.2.2021
தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பழனியில் ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள்

கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன. தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் முககவசம் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த ஆசிரியருடன் பணியாற்றிய மற்ற 64 ஆசிரியர்கள் மற்றும் 61 மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஆசிரியர்கள், 1 மாணவி என 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கொரோனா பாதித்த ஆசிரியர்கள் மற்றும் அந்த மாணவி ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

வகுப்பு மூடப்பட்டன

இதற்கிடையே பள்ளியில் கொரோனா பாதித்த ஆசிரியர்கள் சென்ற வகுப்பு அறைகள் மூடப்பட்டன. மேலும் அந்த ஆசிரியர்கள், மாணவியுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் 467 பேருக்கு…

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி சுகா£தரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 096 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 168 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 4, 053 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தாக்கியவர்களில் இன்று மட்டும் 471 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 33 ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக்ததில் இன்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.