April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா

1 min read

Corona growing in Tamil Nadu

27.2.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இன்று 486 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக கொரோனா சற்று அதிகரித்து வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) 486 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரத்து 063 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 187 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 4, 036 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாநிலத்தில் இன்று மட்டும் 491 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.