April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 479 people in Tamil Nadu today

28.2.2021
தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பதிவு சற்று கூடியது. இந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
இன்றைய கொரோனா பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) 479 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,51,542 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 3 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,469 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று 490 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,35,024 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,022 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,35,532 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.