May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேனா?- அமித்ஷா மீது நாராயணசாமி பாய்ச்சல்

1 min read

Did I give the funds given by the Central Government to Puducherry to Sonia’s family? – Narayanasamy leap on Amit Shah

1.3.2021

புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்று அமித்ஷா கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என்று – நாராயணசாமி கூறினார்.

அமித்ஷா

புதுச்சேரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் “புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, நாராயணசாமியின் அரசுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. ஆனால், மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் வந்து சேரவில்லை. அந்த பணத்தை, டெல்லியில் உள்ள சோனியா குடும்பத்திற்கு திருப்பி அனுப்பும் வேலையை தான் நாராயணசாமி செய்திருக்கிறார்” என்று பேசினார்.

அமித்ஷாவின் இந்த குற்றச்சாட்டுக்கு புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொய்யானது

புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது. அமித்ஷா கூறியது என் மீது வைக்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஆகும். சிபிஐ, வருமான வரித்துறையை கையில் வைத்துள்ள அமித்ஷாவால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? என அவரிடம் நான் சவால் விடுகிறேன்.

அவர் நிரூபிக்கவில்லை என்றால், தேசத்திற்கும் புதுச்சேரி மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், என்னையும் சோனியா குடும்பத்தையும் களங்கப்படுத்த தவறான தகவல் வழங்கியதற்காக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.