May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்ற 482 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 482 people in Tamil Nadu today

4.3.3.2021

தமிழகத்தில் இன்று புதிதாக 482 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரதுறை வெளியிட்ட தகவல் வருமாறு:&

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை ) புதிதாக 482 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,53,449 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். அதாவது சென்னையில் 3 பேரும், நாகப்பட்டினத்தில் ஒருவரும் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,508 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 490 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,36,963 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 3,978 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை

சென்னையில் இன்று மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,36,260 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லையில் இன்று 8 பேருக்கும் தென்காசியில் 2 பேருக்கும் தூத்துக்குடியில் ஒருவருக்கும் கொரோனா இருப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.