May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை

1 min read

Young man stabbed to death near police station

7.3.2021

மானாமதுரை போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த வாலிபரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கோர்ட்டு அருகே கடந்த ஜனவரி மாதம் 9ந் தேதி மானாமதுரையைச் சேர்ந்த அருண்நாதன்(வயது 27), காட்டு உடைகுளத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் (30) ஆகிய இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அருண்நாதன் இறந்தார். வினோத்கண்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பப்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து மானாமதுரையைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (20) உள்பட 9 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அக்னிராஜ் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். அவர் தினமும் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

வெட்டிக்கொலை

இன்று காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வெளியேறியவரை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். கொலையான அக்னிராஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி ராஜராஜன், கூடுதல் எஸ்பி முரளிதரன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.