அ.தி-.மு.க.வில் சசிகலா ஆதரவாளர்கள் 10 பேருக்கு “சீட்”
1 min read10 seats for Sasikala supporters in AIADMK
7/3/2021
அ.தி.மு.க.வில் சசிகலா ஆதரவாளர்கள் 10 பேருக்கு அ.தி.மு.க., ‘சீட்’ கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா
சசிகலா விடுதலையான பின் அரசியலில் இறங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தடீரென்று அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும், ஜெயலலிதா ஆட்சி மலரவேண்டும் என்றும் கூறினார்.
குறிப்பாக தி.மு.க.,வை வர விடக்கூடாது என்றும் சொன்னார். இது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது-.அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்ற, தன் பேச்சை, தினகரன் கேட்காத காரணத்தால், ஆளும் தலைமையிடம், தன் ஆதரவாளர்களை சேர்த்து விட, சசிகலா முடிவெடுத்து அதற்கான பேச்சு வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்கின்றனர்.
10 பேருக்கு சீட்
சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களில், வெற்றிவேல் காலமாகி விட்டார். செந்தில் பாலாஜி, தங்கதமிழ்செல்வன் ஆகியோர், தி.மு.க.,வுக்கு போய் விட்டனர். சாத்து?ர் சுப்பிரமணியன், அ.தி.மு.க.,வுக்கு திரும்பி விட்டார். மீதமுள்ள, 15 பேரில், தகுதி இல்லாதவர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சசி கேட்டுள்ளார்.
குறைந்தபட்சம் 10 பேருக்கு தருவார்கள் என அவர் நம்புகிறார். அ.தி.மு.க.,வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது. 9ம் தேதி வெளியாகும், அடுத்த பட்டியலில், சசிகலா ஆதரவாளர்களின் பெயர்கள் இடம்பெறுவது உறுதியாம்.