உத்தரகாண்ட் முதல் மந்திரியாக திரத்சிங் ராவத் பதவி ஏற்பு
1 min readThrat Singh Rawat takes over as Uttarakhand Chief Minister
10.3.2021
உத்தரகண்ட் முதல்மந்திரியாக பாரதீய ஜனதா எம்.பி.யான திரத் சிங் ராவத் பதவியேற்றார்.
ராஜினாமா
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்மந்திரி திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிறது. ராவத்துக்கு எதிராக மாநில பாரதீய ஜனதாவில் அதிருப்தி ஏற்பட்டது. முதல்மந்திரியை மாற்ற வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து கட்சியின் துணை தலைவர் ரமண் சிங், பொது செயலர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோரை, உத்தரகண்ட் மாநிலத்திற்கு கட்சி மேலிடம் அனுப்பியது. அவர்கள் மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களிடம் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். அப்போது, பலரும் முதல் மந்திரி ராவத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து ராவத்தை ராஜினாமா செய்யும்படி நட்டா வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்து கவர்னரிடம் கடிதம் அளித்தார்.
புதிய முதல்மந்திரி
இதனையடுத்து, புதிய முதல்மந்திரி தேர்வு செய்வதற்காக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் டேராடூனில் நடந்தது. இந்த கூட்டத்தில், லோக்சபா எம்.பி., திரத் சிங் ராவத், மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று(புதன்கிழமை) மாலை கவர்னர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.