May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,437 people in a single day in Tamil Nadu

23/3/2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், 5 வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 1437 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,69,804 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் இன்று மட்டும் 76,128 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதியானவர்களில் 860 பேர் ஆண்கள், 577 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,25,327 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,44,442 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் உள்ளது.

9 பேர் சாவு

இன்று மட்டும் 902 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 041 ஆக உள்ளது. தமிழகத்ல் இன்று மட்டும் கொரோனாவிக்கு 9 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 4பேர், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 2 பேர், நாப்பட்டினத்தில் ஒருவர் இறந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா இறப்பு 12,618 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9,145 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை

இன்று சென்னையில் 532 பேர், செங்கல்பட்டில் 149 பேர், கோவையில் 146 பேர், திருவள்ளூரில் 71 பேர், தஞ்சையில் 67பேர், நெல்லையில் 19 பர், தென்காசியில் 10பேர், தூத்துக்குடியில் 6 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.