பிரசாரத்தின்போது அ.தி.மு.க. எம்.பி. முகமது ஜான் மரணம்
1 min readDuring the campaign, the AIADMK MP Death of Mohammed John
23.3.2021
தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. எம்.பி முகமது ஜான் மரணம் அடைந்தார்.
அ.தி.மு.க. எம்.பி. முகமது ஜான்
அ.தி.மு.க. மாநிலங்கள் அவை எம்.பி.யாக இருந்தவர் முகமது ஜான். இவர் தமிழக சட்டமன்ற தேர்தலையட்டி ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் குமாரை ஆதரித்து, கடந்த ஒரு வார காலமாக, இரவு, பகலாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றார். பின்னர் பிரசாரத்திற்காக அவர் வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட போது நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, உடனடியாக அவரை காரில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முகமது ஜானை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அமைச்சர்
முகமது ஜான் கடந்த 2011ந் தேர்தலில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின் அமைச்சரானார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தார். அதன்பின் டெல்லி மேல்சபை உறுப்பினரானார். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தார்
இரங்கல்
முகமது ஜான் மறைவுக்கு கவர்னர் பனவாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.