May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா இன்று 3 ஆயிரத்தை தாண்டியது

1 min read

In Tamil Nadu, the corona has crossed 3,000 today

2.4.2021
தமிழகத்தில் இன்று கொரோனா 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா இப்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக அதன் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது 3 ஆயிரத்தை தாண்டி கொரோனா பதிவாகியுள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 3,290 பேருக்க கொரேனா£ தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,92,780 ஆக அதிகரித்து உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் மூலமாக 86,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,899பேர் ஆண்கள், 1,391 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,38,978 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,53,766 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,715 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 424 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதல் சென்னையில் 7 பேர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கிளல் தலா ஒருவர் என இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,750 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 18,606 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும்

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) 81,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுவரை நாடு முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,23,01,131 ஆக அதிகரித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.