தமிழகத்தில் இன்று 3,446 பேருக்கு கொரோனா
1 min readCorona for 3,446 people in Tamil Nadu today
3-4-2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) புதிதாக 3,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,96,226 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,764 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,52,431 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 1,834 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,63,258 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 20,204 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தகவல் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.