தமிழகத்தில் இன்று 6,984 பேருக்கு கொரோனா
1 min readCorona for 6,984 people in Tamil Nadu today
13/4/2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,984 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று 82,236 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,47,129 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,84,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,289 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 18 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,945 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 2,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தவிர அதிகபட்சமாக செங்கல்பட்டில் 771 பேர், கோவையில் 504 பேர், திருவள்ளூரில் 285 பேர், காஞ்சிபுரத்தில் 204 பேர், திருப்பூரில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 49,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.