May 10, 2024

Seithi Saral

Tamil News Channel

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு அனுமதி

1 min read

Devotees are allowed to witness the Meenakshi Goddess wedding in Madurai

13/4/2021

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருக்கல்யாணம்

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 22-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 23-ந்தேதிதிக்கு விஜயமும், 24-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 25-ந்தேதி தேர் திருவிழாவும் நடைபெறும்.
இந்த திருவிழாவின் முக்கியமான நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதைக்கான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் திருக்கல்யான நிகழ்வை காணலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.