கோவிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு
1 min readNew restriction on wedding ceremonies at the temple
13/4/2021
கோவிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
அனுமதி இல்லை
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு கடந்த 10-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில், பொது மக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் கோவில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
கோவிலில் நடக்கும் திருமணங்களில் 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் அதற்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். 50 நபர்களுக்கு மட்டும் அனுமதித்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.