May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கோவாக்சின் தடுப்பூசியை, 3 பொதுத்துறை நிறுவனங்களில் தயாரிக்க நடவடிக்கை

1 min read

Action to manufacture covaxin vaccine in 3 PSUs

17.4.2021

கோவாக்சின் தடுப்பூசியை, 3 பொதுத்துறை நிறுவனங்களில் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:&
கொரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது தொடர்பாக, சில வாரங்களுக்கு முன், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களில், மத்திய அமைச்சரவை குழுவினர் ஆய்வு நடத்தினர்.
தயாரிப்பை அதிகரிப்பது, அதற்கான கட்டமைப்புகள் மேம்பாடு குறித்து, நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்படி, கோவாக்சின் தயாரிப்பை, மே, – ஜூன், மாதத்திற்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில், மூன்று பொதுத்துறை நிறுவனங்களில், அதன் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளன.

எனவே, செப்டம்பர் மாதத்திற்குள், மாதந்தோறும், 10 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.