கோவாக்சின் தடுப்பூசியை, 3 பொதுத்துறை நிறுவனங்களில் தயாரிக்க நடவடிக்கை
1 min readAction to manufacture covaxin vaccine in 3 PSUs
17.4.2021
கோவாக்சின் தடுப்பூசியை, 3 பொதுத்துறை நிறுவனங்களில் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:&
கொரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது தொடர்பாக, சில வாரங்களுக்கு முன், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களில், மத்திய அமைச்சரவை குழுவினர் ஆய்வு நடத்தினர்.
தயாரிப்பை அதிகரிப்பது, அதற்கான கட்டமைப்புகள் மேம்பாடு குறித்து, நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்படி, கோவாக்சின் தயாரிப்பை, மே, – ஜூன், மாதத்திற்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில், மூன்று பொதுத்துறை நிறுவனங்களில், அதன் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளன.
எனவே, செப்டம்பர் மாதத்திற்குள், மாதந்தோறும், 10 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.