புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு
1 min readNight curfew in Pondicherry from tomorrow
19.4.2021
புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2-வது பரவல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் பரவி வரும் கொரோனா 2-வது அலையில் இருந்து அனைத்து மக்களும் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று பொதுமக்களிடம் ஆளுநர் தமிழிசை கவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Night curfew in Pondicherry from tomorrow