May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் மருந்தை தாங்களாகவே போட்டுக்கொள்ளக் கூடாது

1 min read

Remtacivir should not be taken by itself for corona

24.4.2021
கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பொதுமக்கள் வீடுகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போ அவர் கூறியதாவது:-

பதற்றம் வேண்டாம்

கொரோனா தொற்று பாதித்த பொதுமக்கள், மருத்துவமனைகளில், இடம் கிடைக்கவில்லை என்று பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.
கொரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர்கள் சோதனை செய்து சிகிச்சை வழங்குவார்களங.
சிக்கலான தருணங்களில் 108 அல்லது 044-6122300 என்ற எண்ணை அழைக்கலாம். அதுபோல 104 என்ற எண்ணையும் அழைக்கலாம். தேவையில்லாமல் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.

ரெம்டெசிவர் மருந்து

சிலர் கொரோனாவுக்கு வீட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவிர் மருந்து வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாது.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.