May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 17,897 பேருக்கு கொரோனா்; 107 பேர் பலி

1 min read

Corona to 17,897 people in Tamil Nadu today; 107 killed

29.4.2021
தமிழகத்தில் இன்று 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 107 பேர் இறந்துள்ளனர்.

17,897 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,48,064 ஆக அதிகரித்துள்ளது.

107 பேர் சாவு

இன்று ஒரேநாளில் மட்டும் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 61 பேரும், தனியார் மருத்துவமனையில் 46 பேரும் என 107 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 933 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 15,542 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,21,575 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,12,556 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு இன்று அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 5,445 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.