கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் திடீர் மரணம்
1 min readSudden death of Congress candidate in Kerala In the Kerala Assembly elections
29.4.2021
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
தமிழகத்தைபோல கேரள சட்டசபைக்கம் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அந்த மாநிலத்தல் வருகிற ஜூன் 1-ந்தேதியுடன் 14வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைகிறது. இதனால், கடந்த 6-ந்தேதி கேரளாவில்உள் 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்ததது. அங்கும் வாக்கு எண்ணிக்கை வருகிற 2ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவியது. ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.
வேட்பாளர் மரணம்
அந்த கட்சியின் நிலாம்பூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வி.வி. பிரகாஷ் போட்டியிட்டார். அவர், மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.