May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரேநாளில் 3,79,257 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 3,79,257 people in one day in India

29.4.2021

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இன்று கலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 76 ஆயிரத்து 524 ஆகியிருக்கிறது.
நேற்று மட்டும் 3 ஆயிரத்து 645 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 04 ஆயிரத்து 832 ஆகி இருக்கிறது.
நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 507 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்து 86 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 30 லட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.