ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் கொரோனா நோயாளிகள் 8 பேர் சாவு
1 min read8 corona patients die in Delhi due to lack of oxygen
1/5/2021
டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் இறந்தனர்.
கொரோனா நோயாளிகள்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில் இதன் பாதிப்பு மிக அதிகமான உள்ளது. அங்கு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் ஆஸ்பத்திரிகளில் படுக்கை இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதோடு டெல்லி ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய ஆக்சிஜனும் கிடைப்பது இல்லை. இதனால் அங்கு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்த துயர சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
8 பேர் சாவு
இந்த நிலையில் இப்போது டெல்லியில் உள்ள பத்ரா ஆஸ்பத்திரியில் 8 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் இன்று பிற்பகல் இறந்துள்ளனர்.
இது குறித்து பத்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதன்ஷு பங்காட்டா கூறியதாவது:-
நாங்கள் மதியம் 12:15 மணிக்கு எல்.எம்.ஓ (திரவ மருத்துவ ஆக்ஸிஜன்) ஐ விட்டு வெளியேறினோம், மதியம் 1.35 மணிக்கு எல்.எம்.ஓ சப்ளை பெற்றோம்.
இடையில் எங்களுக்கு சில ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருந்தன. ஆனால் அவை உபயோகிக்க முடியாத வென்டிலேட்டர்கள்.
இந்த நிலையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் இறந்தனர். எங்களால் சரியான நேரத்தில் ஆக்சிஜனைப் பெறமுடியவில்லை.
இறந்த 8 நோயாளிகளில் 6 பேர் ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.