இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா
1 min readCorona for 4.01 lakh people in a single day in India
1/4/2021
இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.
நேற்று வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து 9வது நாளாக 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்
இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது.
கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் அதாவது நேற்று 4 லட்சத்து ஒரு ஆயிரத்து 993 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனை அடுத்து இந்தியால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்ந்து உள்ளது.
3,523 பேர் சாவு
இந்தியாவில் நேற்று மட்டும் 3,523 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது நாடு முழுவதும் மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 ஆக உள்ளது.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.