April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

2021 – மே மாத பலன்கள்/ காழியூர் நாராயணன்

2 min read
Rasi Palankal for May 2021 By Kaliyur Narayanan
         2021 - மே மாத பலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே செவ்வாய் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும். குரு, சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக நின்று நன்மைகளை தருவார்.
புதனால் சிலர் வீண் அவமரியாதைக்கு உள்ளாகலாம். வாக்குவாதத்தை தவிர்த்து ஒதுங்கி இருப்பது நல்லது. சூரியன் 14-ந் தேதி வரை உங்கள் ராசியில் இருப்பதால் உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அதன்பின் மதிப்பு, மரியாதை கூடும். அதே நேரம் அவரால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிக்கனம் தேவை.
குடும்பத்தில் குதூகலத்திற்கு குறை இருக்காது. புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம். வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். 6-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 29-ந் தேதிக்கு பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு. 10,11-ந் தேதிகளில் சகோதரிகளால் நன்மை கிடைக்கும். 5,6-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் அனுகூலம் ஏற்படும். அதே நேரம் 17,18-ந் தேதிகளில் உறவினர்களிடம் விரோதம் உருவாக வாய்ப்பு உண்டு. சற்று கவனமுடன் இருக்கவும்.
உத்தியோகம் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும். அலைச்சல் ஏற்படும். சிலர் இட மாற்றத்தை காணலாம். மேல அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். புதிய பதவி தேடி வரும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பும்,மரியாதையும் கிடைக்கும். 6-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 29-ந் தேதிக்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். 3,4,30,31 ஆகிய தேதிகளில் அனுகூலமான பலன்கள் நடக்கும்.
வியாபாரம் சிறப்படையும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குறிப்பாக 6-ந் தேதிக்கு பிறகு பணப்புழக்கம் கூடுதலாகும். நீங்கள் தொட்டதெல்லாம் நிறைவேறும். அரசு வகையில் இருந்து வந்த இடையூறுகள் அகலும். சலுகைகள் கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 7,8,9,12,13,14-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். ஆனால் 22,23-ந் தேதிகளில் நல்ல வருமானத்தை காணலாம்.
கலைஞர்கள் மனநிம்மதியையும், புகழையும் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு அரசிடம் இருந்து விருது பாராட்டு வரும். சமூகநல சேவகர்கள் திருப்திகரமாக இருப்பர். அரசியல்வாதிகள் நல்ல நிலையில் இருப்பர். புதிய பதவி கிடைக்கலாம்
மாணவர்கள் அதிகமாக உழைத்தே முன்னேற வேண்டியது இருக்கும். ஆன்றோர்கள் மற்றும் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. இருப்பினும் குரு சாதகமான நிலையில் இருப்பதால் படிப்பில் தொய்வு ஏற்படாது.
விவசாயம் சிறப்படையும். குறிப்பாக துவரை, கொண்டைக்கடலை மஞ்சள், கீரை, காய்கறி, கிழங்குவகை பயிர்களில் நல்ல வருமானம் கடைக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். 6-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் வளர்ப்பில் பெருமை காண்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.15,16-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.24,25-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். 14-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான உபாதைகள் வரலாம். காச நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சû மேற்கொள்வது நல்லது.1,2,19,20,21,28,29-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். 26,27-ந் தேதிகளில் அனாவசியமாக எதிலும் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்-1,9 அதிர்ஷ்டமான எண்கள்.சிவப்பு, மஞ்சள் அதிர்ஷ்டம் தரும் நிறம். 3,4,5,6,10,11,15,16,22,23,24,25,30,31 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு-தினமும் காலையில் சூரியனை வழிபடுங்கள். காக்கைக்கு அன்னம் இடுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் துயரத்தை போக்கி மனத்தைரியத்தை வரவழைக்கும்.பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

                  ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் சுக்கிரன் 6-ந் தேதி சாதமான இடத்துக்கு வந்து நற்பலனை கொடுப்பார். மற்றைய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லை. பொதுவாக எந்த ஒரு காரியத்தையும் அதிக சிரத்தை எடுத்து முடிக்க வேண்டியது இருக்கும். சுக்கிரனின் பக்க பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். அவரால் 29-ந் தேதிக்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும்.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குடும்பத்தில் புதனால் வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.சற்று கவனமாக இருக்க வேண்டும். 6-ந் தேதிக்கு பிறகு விருந்து விழா என சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். சகோதரிகள் உதவிகரமாக இருப்பார். குறிப்பாக 12,13,14-ந் தேதிகளில் அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 7,8,9 உறவினர்கள் வருகையும் அவர்களால் அனுகூலமும் நன்மையும் கிடைக்கப்பெறுவர். 19,20,21-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
உத்தியோகம் எதிர்பாராத இடமாற்றம் வரவும் வாய்ப்பு உண்டு. அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும். உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வெளியூர் வாசம் இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். 6-ந் தேதிக்கு பிறகு சிறப்பான நிலையில் காணப்படுவர். உங்கள் திறமை வெளிப்பட்டு மதிப்பு மேம்படும். சிலர் புதிய பதவி கிடைக்கப்பெறுவர். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். 29-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 5,6-ந் தேதிகளிலும் நல்ல பலனை எதிர்நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள் அதிகாக உழைக்க வேண்டியது இருக்கும். தடைகளை கடந்து லாபம் பெறவும் வாய்ப்பு இருக்கிறது. செலவுகள் அதிகரிக்கும். 6-ந் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு 29-ந் தேதிக்கு பிறகு மறையும். அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன்பிறகு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 10,11,15,16-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 24,25-ந் தேதிகளில் திடீர் பண வரவு ஏற்படும்.
கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். 29-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு அரசிடம் இருந்து விருது பாராட்டு வரும். பொதுநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். பொதுவாக உங்கள் திறமைக்கு பங்கம் வராது. நல்ல புகழ் கிடைக்கும்.அரசியல்வாதிகள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம்.
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.மேல்படிப்புக்கு செல்வோர் எளிதான உங்களுக்கு வசதியான பாடங்களை தேர்வு செய்வது நல்லது.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். ஆடு,கோழி,பசு,கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது
பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. 6-ந் தேதிக்கு பிறகு உங்களால் குடும்பம் சிறக்கும். சிலர் உல்லாச பயணம் மேற்கொள்வர். வேலையில் மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை காணலாம் 17,18-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 26,27-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் வகையில் பணஉதவி கிடைக்கும்
உடல்நலம் சிறப்படையும். சூரியனால்14-ந் தேதிக்கு பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.உடல் நலம் லேசாக பாதிக்கப்படும்.1,2,28,29-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.3,4,30,31-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.லேசான வயிறு பிரச்சினை வரலாம்.
அதிர்ஷ்டம்-2,6 அதிர்ஷ்ட எண்கள். வெள்ளை அதிர்ஷ்டம் தரும் நிறம். 5,6,7,8,9, 12,13,14,17,18,24,25,26,27 ஆகிய தேதிகள் யோகம் தரும் நாட்கள்.
வழிபாடு-சனிக்கிழமைகளில் சனி ஈசுவரனுக்கு அர்ச்சனை செய்ய தவறாதீர்கள். பெருமாள் கோவிலுக் கும் சென்று வாருங்கள். தினமும் காலையில் சூரிய வழிபாடு நடத்தினால் காரிய அனுகூலம் எளிதாகும். முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் தடைகள் அகலும். வெள்ளிக்கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிசெய்யுங்கள்.

                  மிதுனம்

மிதுனம் ராசி அன்பர்களேகடந்த காலத்தை விட நன்மைகள் சற்று குறையும். இது வரை சாதக பலனை தந்து கொண்டிருந்த சுக்கிரன் 6-ந் தேதியும் சூரியன் 15-ந் தேதியும் சாதகமற்ற இடத்துக்கு செல்கிறார்கள். ஆனாலும் குரு, கேது ஆகியோரின் நற்பலன்கள் கிடைக்கும். எனவே மாத முற்பகுதியில் கூடுதல் பலனை காணலாம். புதனாலும் செவ்வாயாலும் உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். இருப்பினும் குரு,கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.கணவன்-மனைவி இடையே அன்வு பெருகும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள்உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.14-ந் தேதி வரை அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.15,16- ந் தேதிகளில் பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொதுவாக உறவினர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். குறிப்பாக 10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் வரும். அதே நேரம் 22,23-ந் தேதிகளில் அவர்கள் வகையில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். 29-ந் தேதிக்கு பிறகு சகோதரிகளால் நன்மை கிடைக்கும்.
உத்தியோகம் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். பதவி உயர்வு காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 14-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பிறகு உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. 7,8,9-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை பெறலாம். 29-ந் தேதிக்கு பிறகு சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
வியாபாரம் சிறப்படையும். லாபம் குறையாது. வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கும். குருவால் அதை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும். 12,13,14,17,18 ஆகிய தேதிகளில் பணச் செலவு அதிகரிக்கும். 26,27-ந் தேதிகளில் நல்ல வருமானம் கிûக்கும்.29-ந் தேதிக்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைக்கேற்ற புகழ் பாராட்டு வரும். 7-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம்.. மாத இறுதியில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் குருவால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் பரிசு பாராட்டு கிடைக்கும்
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். மாத முற்பகுதியில் பழச் செடிகள் மூலம் சிறப்பான மகசூல் கிடைக்கும். கோழி,ஆடு வகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புது சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் முன்னேற்றம் காண்பர். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலையில் மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை காணலாம்.. 19,20,21 -ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து எதிர்பார்த்த பொருட்கள் கிடைக்க பெறலாம். அலங்கார சாமான்கள் வாங்கலாம். 1,2,28,29 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும். சகோதரர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலம் சீராக இருக்கும். 5,6, 24,25-ந் தேதிகளில் லேசான வயிறு பிரச்சினை வரலாம். சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். 3,4,30,31-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 1,2 அதிர்ஷ்ட எண்களாகும். மஞ்சள், சிவப்பு, (14-ந் தேதி வரை செந்தூரம்) அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.1,2,7,8,9,10,11,15,16,19,20,21,26,27,28,29ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு- முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து ஏழைகளுக்கு மொச்சை தானம் செய்தால் எதிரிகளின் இடையூறு இருக்கும் இடம் தெரியாமல் போகும். புதனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.ஆஞ்சநேயரை சனிக்கிழமை தரிசனம் செய்யுங்கள். 14-ந் தேதிக்கு பிறகு தினமும் சூரியனை வழிபடங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.

                   கடகம்

கடகம் ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன், புதன்,ராகு ஆகியோர் மாதம் முழுவதும் நன்மைகளை தருவார்கள். சுக்கிரன் 6-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சாதகமான நிலையில் இருப்பார். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு- மரியாதை சிறப்பாக இருக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குடும்பத்திற்கு தேவையான சகல வசதியும் கிடைக்க பெறுவீர்கள். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். 6-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குறிப்பாக 2,13,14 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஆனால் 24,25-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். 17,18-ந் தேதிகளில் சகோதரிகளால் நன்மை கிடைக்கும். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
உத்தியோகம் வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். மேல்அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர் செல்ல நேரிடலாம்.14-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.10,11-ந் தேதிகளில் எதிர்பாராத நற்பலன் கிட்டும்.
வியாபாரிகள் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உங்களை எதிர்த்த வர்கள் தவிடுபொடி ஆவார்கள். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றி கடனுடன் இருப்பர்.14-ந் தேதிக்கு பிறகுவங்கி கடன் எளிதாக கிடைக்கும். 15,16,19,20,21 ஆகிய தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். 1,2,28,29-ந் தேதிகளில் நல்ல பணவரவை காணலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர் போட்டிகள் முதலியன 6-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். சிறப்பான பலனை பெறலாம் புகழ் பாராட்டு கிடைக்கும்.புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சமூகநல சேவர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதமாகும். 26,27-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். பாசி பயறு நெல், உளுந்து, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தரிள் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய பதவி தேடி வரும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 22,23-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.3,4,30,31 ஆகிய தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம். சகோதரர்களால் உதவி கிடைக்கும்.
உடல்நலம் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் 14-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும்.5,6-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.7,8,9 ஆகிய தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்.- 4,8 அதிர்ஷ்ட எண்கள். பச்சை, செந்தூரம் உகந்த நிறங்கள். 1,2,3,4,10, 11,12,13,14,17,18,22,23,28,29,30,31 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு-பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற தானம் செய்யுங்கள். .வியாழக்கிழமை தெட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது கொண்டை கடலை தானம் செய்யலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.

                 சிம்மம்

சிம்மம் ராசி அன்பர்களேஇந்த மாதம் செவ்வாய், புதன்,குரு, சனி மாதம் முழுவதும் சாதகமாக காணப்படுகிறார்கள். சுக்கிரன் 6-ந் தேதி வரையும் 29-ந் தேதிக்கு பிறகும், சூரியன் 14-ந் தேதிக்குப் பிறகும் நற்பலனை தருவார்கள். எனவே இது சிறப்பான காலமாக அமையும். தடைகள் அனைத்தும் விலகும். எடுத்த காரியம் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
தீயோர் சேர்க்கையால் தொல்லைகள் பல வந்திருக்கும். அவமரியாதையை சந்திந்தித்து மனம் குன்றி போய் இருக்கலாம். இனி இந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவீர்கள்.14-ந் தேதிக்குப் பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை கூடும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்- மனைவி இடையே அன்பு கூடும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும்..15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 26,27-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.19,20,21-ந் தேதிகளில் சகோதரிகள்ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் நன்மை கிடைக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசணையும் வந்து சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். 12,13,14-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபரிகள் நல்ல வளர்ச்சி காண்பர். பகைவர்களின் இடையூறுகள் அடியோடு மறையும். லாபம் அதிகரிக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 11,12,13-ந் தேதிகளில் தடைகளை சந்திக்கலாம். 1,27,28,29 ஆகிய நாட்கள் நல்ல வருமானத்தை காணலாம்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர் போட்டிகள் முதலியன29-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு சிறப்பான புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும் அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். புதிய பதவி கிடைக்கபெறுவர். சமூகநல சேவகர்கள் மதிப்பு மரியாதையுடன் இருப்பர்.
மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர்.இப்போது தேர்வு எழுதியவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி நிச்சயம் காணலாம். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் சிறப்பான மகசூலை பெறலாம். பாசி பயறு நெல், எள், துவரை, கொண்டைக்கடலை, மஞ்சள், தக்காளி, காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். கணவரிடம் அன்பையும் ஆதரவையும் கிடைக்கப் பெறலாம். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறை இருக்காது.5,6 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். 24,25-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.விருந்து விழா என சென்று வருவீர்கள்.29-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். உஷ்ணம், தோல் சம்பந்தமான இடர்பாடுகள் பூரண குணமாகும். 7,8,9-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.1,2,10,11,28,29-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.வயிறு உபாதை வரவாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம்- 4,6 யோகம் தரும் எண்கள். பச்சை, மஞ்சள் ஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.3,4,5,6,12,13,14,15,16,19,20,21,24,25,30,31 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு- ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.நாகதேவதையை வணங்கி வாருங்கள்.துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும் 6-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்து வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.14-ந் தேதி வரை அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சூரிய வழிபாடு நடத்துங்கள்.

                      கன்னி

கன்னி ராசி அன்பர்களே! பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில்தான் உள்ளன. அதற்காக கவலைபட வேண்டாம். சுக்கிரன், கேது மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். கேதுவால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். இதனால் எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது.
குடும்பத்தில் சுக்கிரனால் வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்.22,23-ந் தேதிகளில் பெண்களால் பெருமை கொள்வீர்கள்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 17,18-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 1,2,28,29- ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
செவ்வாயால் அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உங்கள் செல்வாக்கு எதிர்பார்த்தபடி இருக்காது. வீண் விவாதத்தை தவிர்த்து சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
உத்தியோகம் சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கும். அலைச்சல் ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படும்.சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். 15,16-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகளை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள் சீரான முன்னேற்றம் கிடைக்க பெறுவர்.பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். கேதுவால் லாபத்துக்கு குறை இருக்காது. ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.14-ந் தேதி வரை அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமல் போகும்.அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 5,6-ந் தேதிகளில் நல்ல பணவரவை எதிர்பார்க்கலாம்.19,20,21,24,25-ந் தேதிகளில் தடைகள் வரலாம்.
கலைஞர்கள் நல்ல பலனை காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 29-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பது அரிது. உங்களுக்கு வரவேண்டிய பெருமையை, எதிரிகள் தட்டி பறிக்க கூட செய்யலாம். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். 3,4,30,31-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் அதிக சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் கல்வியில் சிறப்படைவர். வெற்றி போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். தேவையான மகசூலை பெறலாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகத்தான் இருக்கும். சிலருக்கு பாதகமான முடிவு வரலாம்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். ஆடம்பர பொருட்கள் கிடைக்க பெறுவீர்கள். குருவின் பார்வையால் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். 7,8,9-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் பண உதவி கிடைக்கும். 26,27-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
உடல்நலம் சுமாராக இருக்கும். உஷ்ணம் மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். பயணத்தின போதும் சற்று கவனம் தேவை.10,11-ந் தேதிகளில் இருப்பார். வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை. 12,13,14-ந் தேதிகளில் வயிறு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம்
அதிர்ஷ்டம்-1,9 யோகம் தரும் எண்கள். சிவப்பு,வெள்ளை ஆகியவை அதிர்ஷ்டமான நிறங்கள்.5,6,7,8,9,15,16,17,18,22,23,26,27ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவகிரகங்களை சுற்றி வாருங்கள். சனிக்கிழமை பெருமாளையும் வியாழக்கிழமை சிவனையும் வழிபடுங்கள். சனிக்கிழமை சனிஈசுவரனுக்கு அர்ச்சனை செய்து ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். சூரிய வழிபாடு நடத்துங்கள்.புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.

துலாம்


துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன், குரு ஆகியோர் சாதகமாக நின்று நன்மைகளை அள்ளித் தருவார்கள்.சுக்கிரன்6-ந் தேதிக்கு பிறகு நற்பலனை தருவார்கள். உங்களின் எண்ணங்களை நிறைவேற்ற குருவும் புதனும் உறுதுணையாக இருப்பார்கள்.தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.சூரியன் இம்மாதம் இடமாறினாலும் சாதகமற்ற நிலையில்தான் உள்ளார். சூரியனால் இருந்து வரும் அவமரியாதை 14-ந் தேதிக்கு பிறகு மறையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.சுக்கிரனால் 6-ந் தேதிக்கு பிறகு வசதிகள் பெருகும். வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்க பெறுவீர்கள். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண்களால் முன்னேற்றமும் கிடைக்கும். குறிப்பாக 24,25-ந் தேதிகளில் அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் அனுகூலமான போக்கு இருக்காது. குறிப்பாக 3,4,30,31 ஆகிய தேதிகளில் வீண்விரோதம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 19,20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் குருவின் பலத்தால் சிறப்பான நிலையில் இருப்பர். உங்கள் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சூரியனால் இருந்து வந்த அலைச்சல் 14-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும் கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். 17,18-ந் தேதிகளில் எதிர்பாராத நற்பலன் கிட்டும்.
வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பர். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.நல்ல வருமானத்தை பெறுவர்.. புதிய தொழில் ஓரளவு சிறப்பாக நடக்கும். 6-ந் தேதிக்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.7,8,9-ந் தேதிகளில் லாபத்தை அதிகரிக்க செய்யலாம். 22,23,26,27-ந் தேதிகள் பிற்போக்கான நாட்களாக அமையும். 14-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிரிகள் வகையில் கவன முடன் இருக்க வேண்டும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 6-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அதன்பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நற்பெயரும் புகழும் கிடைக்க பெறுவர். சிலருக்கு விருது, பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், மேம்பாடு காண்பர். அரசியல்வாதிகள் அதிக முயற்சி எடுத்தால்தான் பதவி கிடைக்கும். 5,6-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்- சீரான நிலையில் இருப்பர்.போட்டிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. குருவால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.
விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம் பயறு வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் சுக்கிரனால் நல்ல அனுகூலமான பலனை காண்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரிள் அன்பை பெறுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் அன்பை உணர்ந்து அனுகூலமாக நடந்து கொள்வர்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். மற்றும் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு லாபத்துக்கு குறை இருக்காது. 1,2,28,29-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 10,11-ந் தேதிகளில் சிறப்பான நாட்களாக இருக்கும். விருந்து, விழாவுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம் வயிறு தொடர்பான உபாதைகள் 14-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 12,13,14-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 15,16-ந் தேதிகளில் வயிறு தொடர்பான சிற்சில உபாதைகள் வரலாம்
அதிர்ஷ்டம்-4,6 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். வெள்ளை, மஞ்சள் நலம் தரும் நிறங்கள்.1,2,7,8,9,10,11,17,18,19,20,21,24,25,28,29 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு-சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். ராகுகால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் துயரத்தை போக்கி மனத்தைரியத்தை வரவழைக்கும்.

                  விருச்சிகம்

விருச்சிகம் ராசி அன்பர்களே! இந்த மாதம் சனிபகவானின் நற்பலன்கள் கிடைக்கும். மேலும் 14-ந் தேதி வரை சூரியன் நன்மை தருவார். சுக்கிரன் 29-ந் தேதி சாதமான இடத்துக்கு வந்து நற்பலனை கொடுப்பார். சந்திரனும் அவ்வப்போது நன்மை தருவார். மற்றய கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் பொதுவாக எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சனி பகவான் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார்.14-ந் தேதி வரை சூரியனால் எதையும் வெற்றிகரமாக முடிக்கலாம். அதன்பின் தடைகளை கடக்க வேண்டியதிருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும்.
குடும்பத்தில் வசதிகள் இருக்கும். கணவன்-மனைவி இடையே மனக்கசப்புகள் வரலாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். 5,6 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வகையில் விரோதம் வரலாம். எனவே ஒதுங்கி இருக்க வேண்டும். ஆனால் 22,23-ந் தேதிகளில் அவர்களால் நன்மை கிடைக்கும். 26,27-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர். அவர்களால் நன்மை கிடைக்கும். 29-ந் தேதிக்கு பிறகு வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உத்தியோகம் சூரியனால் மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.வேலையில் மேன்மை காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். 14-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதுக்கும். அதிகமாக அலைச்சல் இருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய திருக்கும். 19,20,21-ந் தேதிகளில் உன்னதமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
வியாபாரிகளுக்கு உற்சாகம் பிறக்கும் பணப்புழக்கம் மிக அதிகமாக இருக்கும். 14-ந் தேதி வரை லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். அதன்பிறகு வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளால் பிரச்சினை வரலாம்.வீண் அலைச்சல் ஏற்படும்அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்கவைக்க வேண்டியதிருக்கும். பெண்கள் வகையில் இருந்து பொல்லாப்பு வரலாம். 1,2,24,25,28,29 ஆகிய தேதிகளில் தடைகள் வரலாம்.10,11-ந் தேதிகளில் நல்ல வருமானம் கிடைக்ளும்.29-ந் தேதிக்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடை, மனதில் ஏற்பட்ட சோர்வு, பெண்கள் வகையில் இருந்து வந்த இடர்பாடுகள் முதலியன 29-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு நிலைமை சீராகி வளர்ச்சி காண்பர்.சமூகநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தில் இருப்பர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து மீண்டு வர இன்னும் சில காலம் பொறுமையாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் ஆலோசனையும் பெற்றால் சிறப்பு. அதிக முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்க பெறலாம்.
விவசாயிகள் அதிகமான உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். பழவகை பயிர்கள் மூலம் ஓரளவு வருமானத்தை காணலாம். புதிய சொத்து திட்டம் தள்ளி போகும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் சீரான நிலையில் இருப்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும்.14-ந் தேதிக்குள் புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.12,13,14-ந் தேதிகளில் சிறப்பான நாட்களாக இருக்கும். விருந்து, விழாவுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.3,4,30,31-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கப் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல்நலம் சுமாராக இருக்கும். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.14-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.15,16-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 7,8,9,17,18-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
அதிர்ஷ்டம்- 1,4 அதிர்ஷ்டமான எண். கருப்பு, 14-ந் தேதி வரை செந்தூரம் அதிர்ஷ்டத்தை தரும் நிறங்கள்.3,4,10,11,12,13,14,19,20,21,22,23,26,27,30,31ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு- நவக்கிரக வழிபாட்டில் கவனம் செலுத்தவும். ஆசிரியர்கள், ஞானிகள். சன்னியாசிகள் ஆகியோருக்கு இயன்ற காணிக்கை வழங்கி ஆசி பெறுங்கள். புதன் கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.14-ந் தேதிக்கு பிறகு தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.

                  தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன்6-ந் தேதி வரையும், சூரியன் 14-ந் தேதிக்கு பிறகும் நன்மை தருவார்கள்.மேலும் புதன்,ராகு மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். இதனால் உங்கள் ஆற்றல் மேம்படும்.பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. காரிய அனுகூலம் ஏற்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலம் நிலவும். மாதத் தொடக்கத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். புதன் சாதகமாக இருப்பதால் பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமைகள் ஏற்படும். தம்பதியினரிடையே அன்பு பெருகும். சிலர் குழந்தைபாக்கியம் பெறுவர். 1,2,28,29-ந் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். 7,8,9-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில்வீண் மனக் கசப்பு உருவாக வாய்ப்பு உண்டு. எனவே அப்போது மட்டும் சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் 24,25-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் புதனால் நல்ல வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வுக்கு தடைஏதும் இல்லை. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். 14-ந் தேதி வரை சிறு சிறு தடைகள் வரலாம். ஆனால் அதை எளிதில் முறியடிப்பீர்கள். பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு மரியாதை கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். 22,23-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.
வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும்.ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.14-ந் தேதிக்கு பிறகு பகைவர்களின் இடையூறுகள் அடியோடு மறையும். கூட்டாளிக ளிடையே நல்ல அனுகூலமான போக்கு காணப்படம். 12,13,14-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க பெறுவர்.3,4,26,27,30,31-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.29-ந் தேதிக்கு பிறகு பெண்கள் தொல்லைகள் வரலாம். அவர்கள் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.
கலைஞர்கள் 6-ந் தேதிக்கு பிறகு எதிர்பார்த்த புகழ் பாராட்டு பெறுவதில் தடைகள் வரலாம். புதிய ஒப்பந்தங்கள் அதிக முயற்சி எடுத்தால்தான் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. அசமூக நலசேவகர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். அரசியல்வாதிகள் பிரதி பலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டும். 10,11-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள், இந்த மாதம் புதனால் கூடுதல் அனுகூலத்தை காணலாம். அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகைசூடும் வல்லமை கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும்
விவசாயிகளுக்கு எந்த வகையிலும் வருமானத்திற்கு குறை இருக்காது. பயறு வகைகள், உளுந்து, நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். சிலர் புதிய சொத்து வாங்க முயற்சி மேற்கொள்வர்.வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள் கூடுதல் பலனை காண்பர். கணவனின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள்.வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும்.தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 5,6-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். 15,16-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள் சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும்.
உடல் நலம் சிறப்பாக இருக்கும். செவ்வாயால் சிறு சிறு உபாதைகள் வரலாம். 17,18-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.19,20,21-ந் தேதிகளில் வயிறு தொடர்பான லேசான உபாதைகள் வரலாம்
அதிர்ஷ்டம்- அதிர்ஷ்ட எண் கள் 6,8 ஆகியவை ஆகும். நீலம் பச்சை ஆகியவை அதிர்ஷ்ட நிறங் களாகும் 1,2,5,6,12,13,14,15,16,22,23,24,25,28,29 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நவக்கிரகங்களில் ராகு , கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிசெய்யுங்கள். 14-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியனை வழிபட்டால் உடல்நலம் மேம்படும்.


மகரம்

மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு குரு, சுக்கிரன், செவ்வாய், கேது மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். இதனால் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.
குடும்பத்தின் நிலைமை சீராக இருக்கும்.நகை-ஆபரணங்கள் வாங்கலாம். சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.6-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் வேதனைகள் எல்லாம் அடியோடு மறையும். 10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதேநேரம் 26,27-ந் úதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். 3,4,30,31-ந் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
உத்தியோகம் போலீஸ்,ராணுவத்தில்பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். வேலைப்பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியது இருக்கும்..வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியதிருக்கும். சிலர் சோர்வாக காணப்படுவர். ஆனால் 24,25-ந் தேதிகளில் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
வியாபாரிகள் லாபம் கிடைக்கப் பெறுவர். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் ஓரளவு சிறப்பை தரும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.நல்ல வருமானத்தை பெறுவர்.6-ந் தேதிக்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 14-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.1,2,5,6,28,29-ந் தேதிகளில் தடைகள் வரலாம். 15,16-ந் தேதிகளில் நல்ல வருமானம் காணலாம்.
கலைஞர்களுக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தத்தை பெறுவர். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். 29-ந் தேதிக்குப் பிறகு அதிக முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள் குருவால் கல்வி சிறப்பாக அமையும் என்பதால் எதையும் துணிந்து செயலாற்றுங்கள். நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.
விவசாயிகள் விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், சோளம், மஞ்சள், துவரை, கொண்டைக்கடலை,காய்கறி வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்- குடும்பத்தரிள் அன்பை பெறுவர்.அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர்.சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். 6-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 7,8,9-ந் தேதிகளில் ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம். 17,18-ந் தேதிகளில் சிலருக்கு விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பண வரவு இருக்கும்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உடல் நலம் தேறும்.14-ந் தேதிக்கு பிறகு சூரியனால் சிறுசிறு உபாதைகள் வரலாம். 12,13,14,22,23-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு பிரச்சினை வரலாம். 19,20,21-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்-3,9 அதிர்ஷ்ட எண்களாகும். மஞ்சள் சிவப்பு ஆகியவை நலம் தரும் நிறங்கள்.3,4,7,8,9,15,16,17,18,24,25,26,27,30,31 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- தினமும் சூரியனை காலையில் வணங்குங்கள். சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபட்டு காக்கைக்கு அன்னமிடுங்கள்.சனிக்கிழமை பெருமாள் கோவிக்கு சென்று வரலாம். ஆஞ்சநேயர் வழிபாடு ஆறுதலையும், மகத்தான முன்னேற்றத்தையும் கொடுக்கும். புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம்.

                             கும்பம்

கும்பம் ராசி அன்பர்களேஇந்த மாதம் சூரியன் 14-ந் தேதி வரை நன்மை தருவார். அதன் பின் சாதகமற்ற இடத்துக்கு சென்றாலும் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் புதன், சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள்.நல்ல வளத்தோடு காணப்படுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். 6-ந் தேதிக்கு பிறகு புதிய உறவு வரலாம். உறவினர்கள் வகையில் நல்ல அனுகூலமான போக்கு காணப்படும். குறிப்பாக 1,2,28,29-ந் தேதிகளில் அவர்களால் நன்மை கிடைக்கும். அதே நேரம் 12,13,14-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். 29-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். பக்தி உயர்வு மேம்படும்.
உத்தியோகம் புதன் பக்க பலமாக இருப்பதால் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு.வேலைப் பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். பதவிஉயர்வு கிடைக்கும். 26,27-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம்.
வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும் சூரியனால் 14-ந் தேதி வரை நல்ல லாபத்தை காணலாம். அதன்பின் பெண்கள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணவரவுக்கு குறை இருக்காது. 3,4,7,8,9,30,31-ந் தேதிகளில் தடைகள் வரலாம்.17,18-ந் தேதிகளில் நல்ல வருமானம் கிடைக்கும். 29-ந் தேதிக்கு பிறகு ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்
கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொதுநல தொண்டு செய்பவர்கள் சிறப்பான பலனை காண்பர். அரசியல்வாதிகளுக்கு புகழ், கவுரவத்திற்கு பங்கம் வராது. 15,16-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.
மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். தசா புத்தி மோசமாக இருப்பவர்களை தவிர மற்றவர்களின் வெற்றிக்கு உத்திரவாதம் தரலாம். விரும்பிய பாடம் கிடைக்க பெறுவீர்கள்.
விவசாயிகள் சிறந்த மகசூலை பெறுவர். நெல், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடாமல் போகலாம்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்-சிறப்பான நிலையில் இருப்பர்.அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் அதிக லாபம் கிடைக்க பெறுவர். 10,11-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். 19,20,21-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள் சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும்.29-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல் நலம் சீராக இருக்கும்.14-ந் தேதிக்கு பிறகு உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. 22,23-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 24,25-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வயிறு பிரச்சினை வரலாம்.
அதிர்ஷ்டம்- 5,7 அதிர்ஷ்ட எண்கள். பச்சை , வெள்ளைஅதிர்ஷ்ட நிறங்களாகும். 1,2,5,6,10,11,17,18,19,20,21,26,27,28,29ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள் ஆகும்
வழிபாடு- சனிக்கிழமை சனீஸ் வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். 14-ந் தேதிக்கு பிறகு சூரிய தரிசனம் செய்ய வேண்டும்.

                       மீனம்

மீனம் ராசி அன்பர்களே! சனி, ராகுவோடு சுக்கிரனும் இந்த மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். சூரியன் 14-ந் தேதிக்கு பின்னரும் சாதகமாக நின்று நற்பலனை கொடுப்பார். பெரும்பாலான கிரகங்கள் பலமாக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப் புழக்கம் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் கிடைக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.பெண்களால் மேன்மை கிடைக்கும். குறிப்பாக 7,8,9-ந் தேதிகளில் அவர்களால்அதிக அனுகூலம் காணலாம். 3,4,30,31 ஆகிய நாட்களில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 15,16-ந் தேதிகளில் அவர்கள் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
உத்தியோகம் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். தனியார் துறையில் வேலை பார்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். உங்கள் பொறுப்புகளை வேறுயாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஆனால் 6-ந் தேதிக்கு பிறகு சுக்கிரனால் மேன்மை காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். 1,2,28,29-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம்.
வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் வளர்ச்சி அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும் வியாபாரம் வளர்முகமாக இருந்தாலும் அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப் படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். செவ்வாயால் சிலர் தியோர் சேர்க்கையால் அவதியுறுவர் யாரிடமும் பார்த்து பழகவும். 5,6,10,11-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 19,20,21-ந் தேதிகளில் கூடுதல் வருமானம் வரும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள் சிறப்பான புகழோடு காணப்படுவர்.அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.பொதுநல சேவகர்களுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காண்பர். பதவி கிடைப்பதில் தாமதமாகும்.17,18-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும். சிபாரிசின் பேரில் மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள் மகிழ்ச்சியோடு காணப்படுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு அரசின் உதவி கிட்டும்.12,13,14-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். நகைகள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். 22,23-ந் தேதிகளில் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 29-ந் தேதிக்கு பிறகு உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதியஉறவினர்களால் உதவி கிடைக்கும்.
உடல் நலனில் செவ்வாயால் வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 14-ந் தேதிக்கு பிறகு உடல் நலம் சிறப்படையும்.கண் வலி பூரண குணம் அடையும். 24,25-ந் தேதிகளில் சந்திராஷ்டமம் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.26,27-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
அதிர்ஷ்டம்- 3,9 அதிர்ஷ்டம் தரும் எண்கள். கறுப்பு,வெள்ளை ஆகிய நிறங்கள் அனுகூலத்தை தரும். 1,2,3,4,7,8,9,12,13,14,19,20,21,22,23,28,29,30,31ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்
வழிபாடு-குருபகவானுக்கு முல்லை மாலை சூட்டி அர்ச்சனை செய்யுங்கள். புதன் கிழமை குலதெய்வத்தையும் வழிபடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடை தானம் செய்யலாம். 14-ந் தேதி வரை தினமும் அதிகாலையில் குளித்து சூரிய வழிபாடு நடத்துங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.