இறந்த கணவரை ரிக்ஷாவில் கொண்டு சென்ற மனைவி
1 min readThe wife who took her dead husband in a rickshaw
5.5.2021
உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல பணம் இல்லாததால் ரிக்ஷாவில் கொண்டு சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கை பற்றாக்குறை
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஆனால், உத்தர பிரதேசம் மாநிலத்தில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ஆக்சிஜன், படுக்கைக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில் அதை மறைக்க பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
ரிக்ஷாவில்…
இந்த நிலையில், பெண் ஒருவர் உத்தரபிரசேதத்தில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவரின் உடலை ரிக்ஷாவில் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து இறந்தவரின் மகன் கூறியவதாவது:-
கொரோனா பாதித்த என் தந்தைக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் படுக்கை இல்லை. இதனையடுத்து அவர் உயிரிழந்துவிட்டார். இறந்த உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல அதிகளவு பணம் கேட்டனர். அந்த அளவிற்கு பணம் இல்லாததால், ரிக்ஷாவில் அழைத்து சென்றோம்.
இவ்வாகூ அவர் எனக் கூறினார்.
இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.