உருமாற்றமடைந்த கொரோனா குறித்து மார்ச் மாதமே எச்சரித்த விஞ்ஞானி
1 min readThe scientist who warned in March about the deformed corona
5.5.2021
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதத்திலேயே மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுத்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உருமாற்றம் அடைந்த கொரோனா
இந்தியாவில் கொரோனா 2வது அலை சூறாவளிபோல் வேகமாக பரவி வருகிறது. நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 34 லட்சத்துக்கு அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி டாக்டர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளதாவது:-
எச்சரித்தோம்
நாங்கள் கொரோனா பரவல் குறித்து முன்னரே குரல் எழுப்பினோம். நாம் ஆபத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதற்கு அது ஓர் எச்சரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அத்தகவல் பிரதமர் மோடியிடம் சென்றடைவில்லை என்பதை நம்ப முடியவில்லை. அதிகப்படியான தொற்று பரவல் வைரஸ் உருமாற்றத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
ராய்ட்டர்சில் இது குறித்து செய்தி வெளியானது. ஆனால் இந்திய ஊடகங்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியவில் தொற்று மற்றும் பலி எண்ணிகை அதிகரிக்கும் என்று நாங்கள் முன்னரே மத்திய அரசை எச்சரித்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.