May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா 29 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

1 min read

In Tamil Nadu the corona is less than 29 thousand

30-5-2021
தமிழகத்தில் இன்று 28,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 493 பேர் உயிரிழந்து உள்ளனர். 32,982 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 9 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 18 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தவவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 28,864 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,68,580 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,75,11,443 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் நேற்று 32,982 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,39,280 ஆக உயர்ந்தது.

493 பேர் சாவு

நேற்று 493 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,754 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கோவை

இன்று சென்னையில் 2689 பேரும், கோவையில் 2537 பேரும் செங்கல்பட்டில் 1194 பேரும், ஈரோட்டில் 1784 பேரும், சேல்ததில் 1295 பேரும் திருச்சியில் 1128 பேரும், திருப்பூரில் 1496 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
நெல்லையில் இன்று 448 பேருக்கும், தென்காசியி்ல் 397 பேருக்கும் தூத்துக்குடியில் 664 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
நெல்லையில் இன்று 2 பேரும், தென்காசியில் 2 பேரும் தூத்துக்குடியில் 6 பேரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.