May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

2021 – ஜுன் மாத பலன்கள்

2 min read
  

June 2021 Matha Rasi Palan                  
 மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் குரு 11-ம் இடத்தில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். சுக்கிரன் 23-ந் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். சூரியன் 15-ந் தேதி மிதுனத்திற்கு மாறி நன்மை தரத் தொடங்குவார். செவ்வாய் 3-ந் தேதி வரை 3-ம் இடத்தில் நின்று நன்மை கொடுப்பார்.
தெய்வ அனுகூலம் கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். மாத பிற்பகுதியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். பணப்புழக்கம் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பம்- குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குதூகலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம். 6,7,8-ந் தேதிகளில் பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 1,2,3,28,29-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.அதே நேரம் 13,14,15-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
உத்தியோகம்-போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான நிலையில் காணப் படுவர். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 3-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை.ஆனாலும் வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 27,28-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரிகள்- நல்ல வளர்ச்சி காண்பர். பொருளாதார வளம் மேம்படும்.ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 14-ந் தேதிக்கு பிறகு வீண் விரயம் இருக்காது. சேமிப்பு அதிகரிக்கும். லாபம் சிறப்பா இருக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். 18,19 ஆகிய நாட்களில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.4,5,9,10-ந் தேதிகளில் சிறுசிறு தடைகளை சந்திக்கலாம்.
கலைஞர்கள்- சிறப்பான புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தங்களை பெறலாம் சமூகநல சேவகர்கள் மதிப்பு மரியாதையுடன் இருப்பர். புதிய பதவி கிடைக்கபெறுவர். அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். 16,17-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும். இருப்பினும் குரு சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயிகள் விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், சோளம், மஞ்சள், காய்கறி பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 23-ந் தேதிக்குபிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.11,12-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 20,21 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். நற்சுகம் ஏற்படும்.
உடல்நலம்- கண் தொடர்பான உபாதைகள் 14-ந் தேதிக்குப் பிறகு பூரண குணமாகும். செவ்வாயால் 3-ந் தேதிக்குப் பிறகு தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 24,25,26-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.22,23-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 3,7 யோகம் தரும் எண்கள். மஞ்சள், மற்றும் வெள்ளை14-ந் தேதிக்குப் பிறகு செந்தூரம் ஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். 1,2,3,6,7,8,11,12,18,19,20, 21,27,28,29,30. ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
பரிகாரம்- குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம் சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழி பட்டலாம். முடிந்தால் ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள்.15-ந் தேதி வரை காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.

                   ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் 2-ம் இடத்தில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவர் 23-ந் தேதி கடக ராசிக்கு மாறினாலும் நற்பலனை தருவார். செவ்வாய் 3-ந் தேதி கடக ராசிக்கு மாறி நன்மை கொடுப்பார்.
சுக்கிரன்சாதகமான இடத்தில் பிரவேசிப்பதால் மகிழ்ச்சி ஆனந்தம் போன்றவற்றிற்கு குறை இருக்காது.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். எது எப்படி இருந்தாலும் செவ்வாய்,சுக்கிரனால் பிரச்சினையை சமாளித்து முன்னேற்றம் காணலாம்.14-ந் தேதிக்கு பிறகு வீண்விரயம் ஏற்படலாம். சிக்கனமாக இருக்கவும்.
குடும்பம்- அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும். கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.3-ந் தேதிக்கு பிறகு பக்தி உயர்வு மேம்படும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். 22-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். 9,10-ந் தேதிகளில் சகோதரிகளால் முன்னேற்றம் காணலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள்.4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 16,17-ந் தேதிகளில் உற்றார், உறவினர் வகையில் வீண் பிணக்குகள் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் முக்கிய பொறுப்பு கிடைக்க பெறுவர். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.ஆனால் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தை காணலாம். 1,2,3,19,30-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். 3-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
வியாபாரம்- பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன 3-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும்.அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 15-ந் தேதிக்குப் பிறகு பணவிரயம் ஆகலாம். சற்று கவனம் தேவை. 6,7,8,11,12-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். 20,21-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க பெறலாம்.
கலைஞர்கள்-புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு 3-ந் தேதிக்கு பிறகு பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.விரும்பிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.இருப்பினும் குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது.
விவசாயிகள்; விவசாயம் சிறக்கும். ஆடு,கோழி வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். 3-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். 3-ந் தேதிக்கு பிறகு திருட்டு களவு பயம் இருக்காது அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.22-ந் தேதிக்கு பிறகு கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 13,14,15-ந் தேதிகளில் புத்தாடை, அணகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 22,23-ந் தேதிகளில் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். நற்சுகம் ஏற்படும்.
உடல்நலம்- சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர்,அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 14-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அவரால் கண் தொடர்பான உபாதைள் வரலாம். 18,19,27,28-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 24,25,26-ந் தேதிகளில் வீண்விவாதங் களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 4,8 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். பால் வெண்மை, சிவப்பு அதிர்ஷ்ட நிறம். 1,2,3,4,5,9,10,13,14,15,20,21,22,23,29,30.ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
பரிகாரம்-நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஆஞ்சநேயரை வழி பட்டால் அஞ்சம் நீங்கி கூடுதல் பலனை பெறலாம். முடிந்தால் ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யலாம்.சனிக்கிழமை காக்கைக்கு அன்னம் படைத்து உணவு உண்ணுங்கள். புதன் கிழமை பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் 23-ந் தேதி இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை தருவார். மேலும் குரு,கேதுவின் நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும். குருவால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
குடும்பம்- குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 23-ந் தேதிக்கு பிறகு சுக்கிரனால் வசதிகள் அதிகரிக்கு மகிழ்ச்சியும் கலகலப்பும் இருக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குறிப்பாக11,12-ந் தேதிகளில் அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 6,7,8-ந் தேதிகளில் விருந்தினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.அதே நேரம் 18,19-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.சக ஊழியர்கள் தகுந்த நேரத்தில் உதவுவார்கள். சூரியனால் 14-ந் தேதி வரை பொருள் விரையம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். 4,5-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 23-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம்.கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
வியாபாரம்- பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால் உங்கள் முயற்சிகளில்சிறு சிறு தடைகள் வரலாம்.அவரால் 3-ந் தேதிக்கு பிறகு பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 9,10,13,14,15-ந் தேதிகளில் சந்திரனால் பொருள் விரையம் உருவாகலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. 22,23-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். .23-ந் தேதிக்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
கலைஞர்கள்- தொடர்ந்து ஸ்திர தன்மையில் இருப்பர். பெண்களின் அனுகூலத்தால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர். 23-ந் தேதிக்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். சமூகநல சேவகர்களுக்கு அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. 20,21-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இருப்பினும் குருவால் கல்வியில் நல்ல மதிப்பெண் கிடைக்க பெறுவர். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.
விவசாயிகள் நல்ல வருமானத்தை காணலாம். நெல்,சோளம்,மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.கால்நடை வகையில் எதிர்பார்த் தபலனை பெற இயலாது. பாசிபயறு கறுப்புநிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்கவும். .வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பண வரவு இருக்கும். குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் அதிக லாபத்தை பெறுவர். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். 24,25,26-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர்களால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 16,17-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டியது இருக்கும்.14-ந் தேதிக்கு பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.செல்வாக்கு பாதிக்கபபடலாம்.1,2,3,29,30-ந் தேதிகளில் வயிறு தொடர்பான சிறுசிறு பிரச்சினை வரலாம். 27,28-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.
அதிர்ஷ்டம்- 5,9 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட நிறங்கள்ஆகும். 4,5,6,7,8,11,12,13,17,22,23,24,25,26. ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்
பரிகாரம்-நவகிரகங்களில் சூரியன், செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். கோதுமை, துவரை தானம் செய்யலாம். முருகன் கோவிலுக்கு சென்று ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். புதன் கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிபயறு தானம் செய்யுங்கள் அல்லது பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.

                   கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருக்கும் சூரியன் 14-ந் தேதி வரை நற்பலனை கொடுப்பார். அதன்பின் அவர் 12-ம் இடமான மிதுனத்தில் சஞ்சரிப்பதால் நன்மை ஏதும் தரமாட்டார். சுக்கிரன் 23-ந் தேதி கடகத்திற்கு மாறி நன்மை தருவார்.மேலும் 11-ல் உள்ள புதன், ராகு மாதம் முழுவதும் நன்மை தருவாகள்.
பொதுவாக மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும்.14-ந் தேதிக்கு பிறகு வீண்விரயம் ஏற்படலாம். சிக்கனம் தேவை. .
குடும்பம் புதன் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ராகுவால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். குறிப்பாக 13,14,15-ந் தேதிகளில் அவர்களால் அனுகூலம் கிடைக்கும். 9,10-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அதன் மூலம் ஆனந்தமும் அடைவீர்கள். ஆனால் 20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். 22-ந் தேதிக்கு பிறகு சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகம்- அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 14-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பிறகு சிலர் இடமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். பொருள் விரையம் ஏற்படும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் வேலையில் திருப்தி காண்பர். மேல்அதிகாரிளின் ஆதரவும் ஆலோசனனையும் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. 6,7,8-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம். எதிலும் வெற்றி காணலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்-பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். தொழிலில் லாபம் இருக்கும். பணவரவுக்கு பஞ்சம் இருக்காது.வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். 14-ந் தேதி வரை அரசு வகையில் அனுகூலம் காணப்படுகிறது. அதன்பிறகு பொருள் விரையம் ஏற்படும். 11,12,16,17-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். 24,25,26-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கலைஞர்கள்- காரியத்தடை, பொருள் நஷ்டம் முதலியன 22-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். 22,23-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்-புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி காணலாம். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயம்- நெல்,சோளம்,மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த் தபலனை பெறலாம்.பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.வழக்கு, வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவனின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். அக்கம் பக்கத்தார் அன்னியோனியமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு பொருளாதார வளம் இருப்பதால் வேண்டிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும். தொழிலில் லாபம் குறையாது. 27,28-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். 18,19-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம்.
உடல் நலம்- செவ்வாயால் இருந்து வந்த பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் , பொருள் விரயம் முதலியன 3-ந் தேதிக்கு பிறகு மறையும். பயணத்தின் போது கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. 4,5-ந் தேதிகளில் .வாயு தொடர்பான உபாதை வரலாம்.1,2,3,29,30-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 1,7ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக அமையும். பச்சை ,நீலம் நிறம் அதிர்ஷ்டம் தரும்.6,7,8,9,10,13,14,15,18,19,24,25,26,27,28. ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள் ஆகும்.
பரிகாரம்- விநாயகர் வழிபாடு மனநிம்மதியை தரும். குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.14-ந் தேதிக்கு பிறகு சூரியனை காலையில் வணங்குங்கள்.

                    சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் 10-ல் உள்ள புதன் முன்னேற்றத்தை தருவார். 15-ந் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை தருவார். சுக்கிரன் தற்போது நற்பலனை கொடுத்தாலும் 22-ந் தேதிக்குப் பிறகு அவர் சாதகமற்ற இடத்திற்கு மாறுகிறார். 7-ல் உள்ள குரு, 6-ல் உள்ள சனி ஆகியோராலும் நன்மைகள் பெறமுடியும்.
சூரியனால் எடுத்த காரியம் சிறப்பாக முடியும்.மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். காரிய அனுகூலம் ஏற்படும். குரு 7-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.
குடும்பம்- புதன் சாதகமாக இருப்பதால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்..பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். குறிப்பாக 16,17-ந் தேதிகளில் பெண்களால் பல்வேறு அனுகூலங்களை காணலாம். 11,12-ந் தேதிகளில் விருந்தினர்கள் வருகையும் அதனால் மனதிற்கு புதிய உற்சாகமும் பிறக்கும். ஆனால் 22,23-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம் .
உத்தியோகம்- சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைபளு குறையும். புதன் சிறப்பாக இருப்பதால் எந்த பின்னடைவும் வராது. உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும்.சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 14-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 9,10-ஆகிய தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வியாபாரம்- சிறப்படையும். லாபத்திற்கு எந்த குறையும் இருக்காது. தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.15-ந் தேதிக்குப் பிறகு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.13,14,15,18,19-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 27,28-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கலைஞர்கள்- புதிய ஒப்பந்தங்கள் பெற்று சிறப்பு நிலையை அடைவர். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.24,25,26-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். .
மாணவர்கள்- தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பர். உங்களின் முயற்சிக்கு தக்க பலன்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயிகள் நெல், கரும்பு,பாசிபயறு, எள், கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், கேழ்வரகு, பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும்.பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களின் எண்ணம் 3-ந் தேதிக்குள் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் குதூகல நிலையில் இருப்பர். உங்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.புதிய பதவி தேடி வரும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 20,21-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம். 1,2,3,29,30 ஆகிய தேதிகள் உன்னதமான நாளாக அமையும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்- சிறப்பாக இருக்கும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். 6,7,8-ந் தேதிகளில் வயிறு உபாதை வரவாய்ப்பு உண்டு. 4,5-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 2,3 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். செந்தூரம், பச்சை அதிர்ஷ்ட நிறங்களாகும்.1,2,3,9,10,11,12,16,17,20,21,27,28,29,30. ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்
பரிகாரம்- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கைக்கு பூஜை செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். 22-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ காயத்திரி தேவியை வணங்கி வரவும்.

                  கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதத்தை பொறுத்தவரை விருச்சிகத்தில் இருக்கும் கேது நற்பலனை கொடுப்பார்.செவ்வாய் 3-ந் தேதியில் இருந்தும்,15-ந் தேதியில் இருந்தும்,சுக்கிரன்23-ந் தேதியில் இருந்தும் சாதகமான பலனை தருவார்கள்.
நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் காலம். எடுத்த காரியம் சிறப்பாக முடியும். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு மரியாதை படிப்படியாக அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் 15-ந் தேதிக்குப் பிறகு மறைந்து செல்வாக்கு பெருகும். அதுவரை வீண்விவாதங்களை தவிர்க்கவும். 3-ந் தேதிக்கு பிறகு செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். திருட்டு களவு பயம் இனி இருக்காது.
குடும்பம்- தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். சச்சரவுகள், பிணக்குகள் அடியோடு மறையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்கள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். குறிப்பாக 18,19-ந் தேதிகளில் அவர்களால் நன்மை கிடைக்கும். 13,14,15-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 24,25,26-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.மேல் அதிகாரிகளிடம் அனுசுரித்து போகவும். புதனால் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம் ஆனால் செவ்வாய், கேது சாதமாக இருப்பதால் பிற்போக்கான நிலை ஏற்படாது. வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை. சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். ஜூலை 11,12-ந் தேதிகளில் உன்னத மானபலன் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள்- நல்ல லாபத்தோடும், செழிப்போடும் காணப்படுவர். 14-ந் தேதிக்கு பிறகு சிலர் வியாபாரத்தை விரிவுப்படுத்துவர். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். சேமிப்பு பணத்தை நிரந்தர சேமிப்பு கணக்கில் போடுவது சிறப்பு. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 16,17,20,21-ந் தேதிகளில் உங்கள் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம்.1,2,3,29,30-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கலாம்.
கலைஞர்கள்- பிற்போக்கான நிலையில் இருந்து 22-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். அதன்பின் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு, புகழ் தானாக வரும்.பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். .27,28-ந்தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்- புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் தீயமாணவர்க ளோ சேர்ந்து கெட்டப் பெயர் எடுக்க வாய்ப்பு உண்டு.கவனம் தேவை.குருவின் பார்வையால் உங்கள் முயற்சி வீண்போகாது.ஆசிரியர்கள்,ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல வளத்தை காண்பர். விளைச்சல் சிறப்பாக இருக்கும். ஆடு,கோழி வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் 3-ந் தேதிக்கு பிறகு கைகூடும். அதன்பிறகு பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்- குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளால் சிறப்படைவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். பதவி உயர்வு காண்பர்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 4,5-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். மேலும் 22,23-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். 22-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.
உடல்நலம்- உஷ்ணம், தோல், தொடர்பான நோய் முதலியன 3-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். 9,10-ந் தேதிகளில் வயிறு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம். 6,7,8-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 1,9ஆகிய எண்கள் அதிஷ்ட எண்கள் ஆகும்.வெள்ளை, சிவப்பு யோகம் தரும் நிறங்கள்.1,2,3,4,5,11,12,13,14,15,18,19,22,23,29,30. ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
பரிகாரம்- வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பைரவருக்கு பூஜை செய்யலாம். மேலும் வயதான மூதாட்டிகள் மற்றும் சன்னியாசிகளுக்கு இயன்றதை கொடுத்து உதவுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழி பட்டு வாருங்கள். சனீசுவரனுக்கு அர்ச்சனை செய்து ஊனமுற்ற ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.14-ந் தேதி வரை காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஞாயிற்றுக் கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.

                  துலாம்

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் 5-ல் உள்ள குரு முன்னேற்றத்தை தருவார். உங்கள் ராசிக்கு 8-ல் இருக்கும் புதன் மாதம் முழுவதும் நன்மை தருவார். மேலும் சுக்கிரன் 23-ந் தேதி வரை நன்மை தருவார். மற்றபடி 15-ந் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் அவரால் நன்மைதர இயலாது. செவ்வாய், சனி,ராகு,கேது ஆகியோராலும் நற்பலனை கொடுக்க முடியாது.
குடும்பம்- குரு பகவான் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சகோதரிகளின் ஆதரவு இருக்கும்.அவர்களால் பொருள் சேரும். குறிப்பாக 20,21-ந் தேதிகளில் அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.. விருந்து, விழா என சென்று வருவீர்கள்.16,17-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 27,28-ந் தேதிகளில் அவர்கள் வகையில் பிரச்சினை வாலாம். அந்த நாட்களில் ஒதுங்கி இருக்கவும் அல்லது வாக்குவாதத்தை தவிர்க்கவும்.14-ந் தேதிக்கு பிறகு சூரியன் 9-ல் இருப்பதால் அனாவசியமாக எதிலும் இறங்க வேண்டாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும்.
உத்தியோகம்- உங்களுக்கு நல்ல பெயரும், மதிப்பும் கிட்டும்.வேலையில் திருப்தி காண்பர். மேல்அதிகாரிளின் ஆதரவும் ஆலோசனனையும் கிடைக்கும். கோரிக்கை -கள் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சூரியனால் 15-ந் தேதி வரை அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருக்கவும். 13,14,15-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம்- தொழிலில் லாபம் குறையாது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். அரசு வகையில் இருந்து வந்த பிரச்சினை 14-ந் தேதிக்கு பிறகு மறையும். அது வரை வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும் .18,19,22,23-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 4,5-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கலைஞர்கள்- முன்னேற்றமான பலனை காணலாம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 22-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். அவப்பெயர் உருவாகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். அதிக முயற்சி எடுத்தால்தான் பதவி கிடைக்கும்.1,2,3,29,30-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்-குருவால் நல்ல நிலையில் இருப்பர்.பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். புதன் சாதமான இடத்தில் இருப்பதால் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம்.
விவசாயிகள் சிறந்த மகசூலை பெறுவர். செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும். பாசி பயறு நெல், கொண்டைக்கடலை, மஞ்சள் சோளம், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் நற்பெயர் எடுப்பர். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். கணவனின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். குடும்பத்தில் உங்களின் அன்பை உணர்ந்து அனுகூலமாக நடந்து கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 24,25,26-ந் தேதிகளில் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். 6,7,8-ந் தேதிகளில் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம் மேம்படும். 3-ந் தேதிக்குப் பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.பயணத்தின் போது கவனம் தேவை.11,12-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான சிற்சில உபாதைகள் வரலாம்.9,10-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்-1,5 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். மஞ்சள்,பச்சை அதிர்ஷ்ட நிறம்.4,5,6,7,8,13,14,15,16,17,20,21,24,25,26. ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்
பரிகாரம்- தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். செவ்வாய்க் கிழமை முருகனை வணங்குங்கள்.சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள் நவக்கிரகங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம்.

                    விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் சனி நற்பலனை கொடுப்பார். சுக்கிரன் 23-ந் தேதி இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை தருவார். சூரியன் 15-ந் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் எந்த பலனும் கிடைக்காது. அதே போல் உங்கள் ராசியில் உள்ள கேது, 4-ம் இடத்தில் உள்ள குரு, 7-ம் இடத்தில் உள்ள புதன், ராகு, 8-ம் இடத்தில் உள்ள செவ்வாய், ஆகியோரும் நற்பலனை கொடுக்க மாட்டார்கள். சனிபகவான் 3-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார்.
குடும்பம்- குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். சுக்கிரனால் வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 22,23-ந் தேதிகளில் அவர்களால் கூடுதல் நன்மை கிடைக்க பெறலாம். 18,19-ந் தேதிகளில் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 1,2,3,29,30-ந்தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.மேல் அதிகாரிகளிடம் அனுசுரித்து போகவும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் சுக்கிரன் சாதமாக இருப்பதால் பிற்போக்கான நிலை ஏற்படாது. வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை. சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் 14-ந் தேதிக்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். 16,17-ந் தேதிகளில் பல நன்மைகள் கிடைக்க பெறலாம்.
வணிகம்- அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் பயணம் ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேறம் அடையலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும் 15-ந் தேதிக்குப் பிறகு அரசு வகையில் பிரச்சினை வரலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.20,21,24,25,26-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். 6,7,8-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பொதுநலம்- கலைஞர்கள் உங்கள் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும்.புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும். பொதுநல சேவகர்களுக்கு செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சுமாரன பலனையே காணலாம். பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.4,5-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்- முயற்சிக்கு ஏற்ற பலனை அடைவர். சிரத்தை எடுத்து படிக்கவும். மெத்தனமாக இருக்க வேண்டாம்.
விவசாயம்- விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக பயறு வகைகள் காய்கறி பயிர்கள் நல்ல மகசூலை தரலாம். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள்- குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பீர்கள். விருந்து விழா என சென்று வருவீர்கள்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருக்கும்.சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு பொருளாதார வளம் இருப்பதால் வேண்டிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும். தொழிலில் லாபம் குறையாது. 9,10-ந்தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். நற்சுகம் ஏற்படும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். 27,28-ந் தேதிகளில் பிறந்து வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப்பெறலாம்
உடல்நலம்-சீராக இருக்கும். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் 3-ந் தேதிக்கு பிறகு மறையும். சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன14-ந் தேதிக்கு பிறகு இருக்காது. 13,14,15-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வாயு தொடர்பான உபாதை வரலாம்.11,12-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 4,6ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, கறுப்பு நலம் தரும் நிறங்கள்.6,7,8,9,10,16,17,18,19,22,23,27,28.ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்க ளாக அமையும்.
பரிகாரம்- சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரங்களை சுற்றி வாருங்கள்.ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்தால் தடைகள் விலகி முன்னேற்றம் அதிகம் காணலாம். தினமும் காலையில் சூரியனை வணங்கி ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.

                   தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் ராகு மற்றும் புதனால் நற்பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் 23-ந் தேதியில் இருந்து நற்பலனை கொடுப்பார். சூரியன் 14-ந் தேதி வரை ரிஷபத்தில் நின்று நன்மை தருவார். அதன்பின் அவர் 7-ம் இடம் செல்வதால் அவரால் நன்மை தர முடியாது. அதேபோல் ராசிக்கு 2-ல் உள்ள சனி, 3-ல் உள்ள குரு, 7-ல் உள்ள செவ்வாய்,12-ல் உள்ள கேது ஆகியோராலும் எந்த பலனையும் பெறமுடியாது.
உங்கள் முயற்சியில் இருந்து வரும் தடைகளை உடைத்தெரியும் வல்லமை புதனால் பெறுவீர்கள். சூரியனால் மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும் 14-ந் தேதிக்குப் பிறகு அவரால் அவப்பெயர்வர வாய்ப்பு உண்டு. எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும்.
குடும்பம்- உங்கள் ஆற்றல் மேம்படும். எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். சுக்கிரனால் 22-ந் தேதிக்குப் பிறகு வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.குறிப்பாக 24,25,26-ந் தேதிகளில் பெண்களால் அனுகூலம் ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே அப்போது சற்று விலகி இருக்கவும். அதே நேரம் 20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்- உத்தியோகத்தில் பதவி உயர்வு காண்பர். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.. 22-ந் தேதிக்கு பிறகு சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.வெளியூர் வாசம் இருக்கும். 18,19-ந் தேதிகளில் எதிர்பாராத பலன்கள் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம்-மாதத் முற்பகுதியில் தொழிலில் அதிக லாபத்தை எதிர்ப்பார்க்கலாம்.. பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 22-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். 22,23,27,28-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம. சற்று கவனமாக இருக்கவும்.9,10-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்கள்- சுக்கிரன் 22-ந் தேதிக்குப் பிறகு சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிறப்பான வருமானம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அலைச்சலை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். 6,7,8-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்- புதன் சாதகமாக காணப்படுவதால் நற்பெயர் எடுப்பர். ஆசிரியரின் ஆலோசனையை நன்மை தரும். நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி போன்றவை கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள்- உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். நெல்,பாசிபயறு போன்ற தானிய வகைளில் நல்ல மகசூல் கிடைக்கும்.கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள்- குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். .தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 1,2,3,29,30-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கபெறலாம்.11,12-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும்.
உடல்நலம்- உடல் ஆரோக்கியம் மேம்படும். 14-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான லேசான உபாதைகள் வரலாம். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.16,17-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 13,14,15-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 5,8 அதிஷ்ட எண்.பச்சை,நீலம் மற்றும் 14-ந் தேதிக்கு வரை செந்தூரம். சிறப்பை தரும் நிறங்கள்.1,2,3,9,10,11,12,18,19,20,21,24,25,26,29,30. ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
பரிகாரம்- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும்.. முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு இயன்றதை தானம் கொடுங்கள். துர்க்கையை வழிபட்டால் மேலும் வசதிகள் கிடைக்கும்.14-ந் தேதிக்கு பிறகு தினமும் காலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள்.

                    மகரம்

மகர ராசி அன்பர்களே! சூரியன் தற்போது பாதகமான இடத்தில் இருந்தாலும் 15-ந் தேதி மிதுனத்திற்கு மாறி சாதகமான பலனை தருவார். குரு, கேது மாதம் முழுவதும் நன்மை தருவார்.செவ்வாய் 3-ந் தேதி வரை சாதகமான பலனை தருவார்.
எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குறிப்பாக 15-ந் தேதிக்குப் பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பம்- மாதத் தொடக்கத்தில். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பண வரவுக்கு குறை இருக்காது. நகை-ஆபரணங்கள் வாங்கலாம். புதனால் மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். மனக்கவலை ஏற்படும். ஆனால் குடும்ப பெரியோர் உற்ற துணையாக இருந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வர்.27,28-ந் தேதிகளி சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பர். அவர்களால் உதவி கிடைக்கப் பெறலாம். 6,7,8-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அதேநேரம் 22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்- பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேல்அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். 13,14-ந் தேதிகளில் சிறப்பான பலன்கனை காணலாம்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம்- தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கும். ஆனால் அது 14-ந் தேதிக்கு பிறகு தவிடுபொடியாகி விடும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். கேது பக்க பலமாக இருப்பதால் எந்த தொழிலையும் தைரியமாக நின்று நடத்தி இறுதியில் வெற்றி கொள்ளலாம். 1,2,3,24,25,26,29,30-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.11,12-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்கள்- முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 22-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும் அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பாக காணப்படுவர். எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறுவர்.
மாணவர்கள்- ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமையும் என்பதால் எதையும் துணிந்து செயலாற்றுங்கள்.
விவசாயிகள்- மிகவும் முன்னேற்றம் அடைவர். எந்த பயிர் செய்தாலும் அதில் நல்ல வருமானத்தை காணலாம். மேலும் பசுவளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள்- குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெற்று குதூகலம் அடைவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.பதவி உயர்வு காண்பர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 3-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.4,56-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.11,12-ந் தேதிகளில் சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். சிலருக்கு விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
உடல்நலம்- சுமாராக இருக்கும். 15-ந் தேதிக்குப் பிறகு சூரியனால் சிறுசிறு உபாதைகள் வரலாம். 18,19-ந் தேதிகளில் வயிறு பிரச்சினை வரலாம்.பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 16,17-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்-7,9 அதிர்ஷ்ட எண்கள் ஆகும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், சிவப்பு, 14-ந் தேதிக்குபிறகு செந்தூரம்). 4,5,11,12,13,14,15,20,21,22,23,27,28,ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாக அமையும்
பரிகாரம்-ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். இப்படி செய்தால் மன நிம்மதியும், வாழ்வில் வளமும் கிடைக்கும்.14-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள்.ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் கொடுக்கலாம்.

                   கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் 4-ம் இடத்தில் இருக்கும் புதன் மாதம் முழுவதும் நன்மை தருவாகள். செவ்வாய் 3-ந் தேதியில் இருந்து சாதகமான பலனை தருவார். உங்கள் ராசிக்கு 5-ல் உள்ள சுக்கிரன் 23-ந் தேதி வரை நன்மை தருவார். அதேநேரம் சூரியன் 15-ந் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் நன்மை ஏதும் தரமாட்டார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கும் ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் கேது, 12-ம் இடத்தில் இருக்கும் சனிபகவான் ஆகியோராலும் நன்மை ஏதும் கிட்டபோவது இல்லை.
குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. அதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். குருவின் பார்வைகளால் பல்வேறு துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்..
செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். புதனால் மதிப்பு, மரியாதை செல்வாக்கு சிறப்பாக இருக்கும். நல்ல பணப் புழக்கத்தை காண்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும்.
குடும்பம்- குடும்ப பெரியோர் வகையில் அனுகூலமான போக்கு இருக்கும் அவர்கள் உதவிகரமாக இருப்பர். சிக்கலான பிரச்சினைக்கு அவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. தம்பதியினரிடையே கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பக்தி உயர்வு மேம்படும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக 24,25,26-ந் தேதிகளில் அவர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 9,10-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். 1,2,3,29,30-ந் தேதிகளில் பெண்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.
உத்தியோகம்- தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதன்,சுக்கிரனால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். 3-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.கோரிக்கைகள் நிறைவேறும். 22,23-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
வியாபாரம்.- கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரிகளின் இடையூறை களை உடைத்தெறிவீர்கள். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் இவைகள் 14-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைத்து விட வேண்டாம். 4,5,27,28-ந் தேதிகளில் சந்திரனால் சிற்சில தடைகள் வரலாம். 13,14,15-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறலாம்.
கலைஞர்கள்- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ். பாராட்டு வந்து சேரும். 22-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். நல்ல அந்தஸ்தை பெறுவர். 11,12-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்- கல்வியில் சீரான பலனை காண்பர். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்க பெறுவீர்கள்.
விவசாயிகள் காய்கறி, பழவகைகள், மானாவாரி பயிர்கள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.3-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.
பெண்கள்- சிறப்பான பலனை காணலாம். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும்.3-ந் தேதிக்கு பிறகு பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.6,7,8-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். 16,17-ந் தேதிகளில் சகோதரிகளால் உதவி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.
உடல்நலம்- பிள்ளைகள் உடல் ஆரோக்கியம் மேம்படும். 20,21-ந் தேதிகளில் வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 18,19-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்- 3,7 ஆகிய எண்கள் அதிஷ்ட எண்கள் ஆகும். பச்சை, சிவப்பு யோகம் தரும் நிறம். 1,2,3,6,7,8,13,14,15,16,17,22,23,24,25,26,29,30.ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
பரிகாரம்- வெள்ளிக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சூரியனை வணங்கி பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம். தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். சன்னியாசிகள், ஞானிகளுக்கு இயன்றதை காணிக்கையாக கொடுத்து ஆசி பெருங்கள்.

                     மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் சனி, ராகு சாதகமான இடத்தில் நின்று குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார். சுக்கிரன் 23-ந் தேதி கடகத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன் 14-ந் தேதி வரை ரிஷபத்தில் இருந்து முன்னேற்ற பலனை கொடுப்பார். அதன்பின் அவர் 4-ம் இடத்திற்கு செல்வதால் நன்மை ஏதும் தரமாட்டார்.
பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ராகு காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்து கொண்டு இருக்கிறார்.
குடும்பம்- சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.22-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். பிள்ளைகள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 4,5-ந் தேதிகளில் பெண்களால் அனுகூலம் காணலாம். 11,12 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.ஆனால் 27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்- பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். சுக்கிரன் பலமாக இருப்பதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். 24,25,26-ந் தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வியாபாரம்- சிறப்படையும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பா இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். புதனால் பகைவர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 14-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.1,2,3,6,7,8,29,30-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். 16,17-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க பெறலாம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 3-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். 22-ந் தேதிக்கு பிறகு வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.குடும்ப பெரியோர்களும் உதவி செய்வார்கள்.சிலர் தங்கள் வணிகத்தை வெளிநாடு வரை விரிவுப் படுத்தலாம். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள்- உற்சாகமான பலனை காண்பர். புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை பெறலாம். விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நல்ல பெயரையும் பொருளாதர வளத்தையும் பெறுவர்.13,14,15-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்- சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களிடம் அறிவுரை கேட்கவும்.
விவசாயிகளுக்கு பயறு வகைகள் மற்றும் பழவகைகள், மஞ்சள், கேழ்வரகு, சோளம் எள், உளுந்துபோன்ற பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காணலாம்.நவீன விவசாயத்தை பயன்படுத்தி வளம் காணலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்- புத்தாடை, அணிகலன்கள் பெற்று குதூகலம் அடைவர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர்.. அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.22-ந் தேதிக்கு பிறகுபூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 18,19-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.சகோதரிகளால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 9,10-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம்.நகைகள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.
உடல்நலம்-சிறப்படையும் பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 3-ந் தேதிக்கு பிறகு குழந்தைகள் நலனில் சற்று கவனம் தேவை. 22,23-ந் தேதிகளில் வயிறு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம். 20,21-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்- 4,6 ஆகிய எண்கள் அதிஷ்ட எண்கள் ஆகும். கறுப்பு, வெள்ளை யோகம் தரும் நிறங்கள். 4,5,9,10,16,17,18,19,24,25,26,27,28. ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
பரிகாரம்- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் பிள்ளைகள் நலம் மேம்படும். ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடை தானம் செய்யலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும். 14-ந் தேதிக்குப் பிறகு தினமும் காலையில் எழுந்து சூரிய தரிசனம் செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.