தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன
1 min readVaccines are available in Tamil Nadu for only 2 days
31.5-.2021
தமிழகத்தில் கோவிட் தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு மட்டும் போதுமான அளவிலேயே கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி
தமிழகத்தில் கோவிட் 2வது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து வரும் சூழலில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இருக்கிற மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ஊக்கத் தொகையை தந்து மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி உள்ளார்.
நானும், சுகாதாரத்துறை செயலாளரும் போகிற இடங்களிலெல்லாம் மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி நோயாளிகளை மேலும் ஊக்கப்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும்தான் கோவையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முதல்வர் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
இன்னும் 2 நாட்கள்
தமிழகத்தில் கோவிட் தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு மட்டும் போதுமான அளவிலேயே கையிருப்பில் உள்ளது. தமிழகத்திற்கு மத்தியஅரசு 25 லட்சம் தடுப்பூசிகள் தர வேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்