மனைவியை கொன்று எரித்து கொரோனா மீது பழிபோட்ட வாலிபர்
1 min readThe young man who killed and burned his wife and blamed it on Corona
29.6.2021
மனைவியை கொலை செய்து அரசு மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
எரிந்த நிலையில் பிணம்
கொரேனா உச்சக்கட்டத்தில் இருந்தபோது பல நகரங்களில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. கொரோனாவால் இறந்த பலரது உடல்களை அவர்கள் வீட்டுக்குச் கொண்டு செல்லாமல் தகனம் செய்துவிடுவர். பல இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர்கள் இறந்துவிட்டால் அதுபற்றி ஊருக்கு உடனடியாக தெரியவதில்லை.
இதை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தில் ஒருவர் தன் மனைவியை கொன்று எரித்துவிட்டு கொரோனாவில் இறந்து போனதாக நாடகம் ஆடினார்.
அவரது பெயர் ஸ்ரீகாந்த் ரெட்டி. புங்கனூர் மண்டலத்தில் உள்ள ராமசாமுத்திரத்தைச் சேர்ந்த அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர். இவரது மனைவி டெக்கி புவனேஸ்வரி. இவரை திடீரென்று காணவில்லை. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் கேட்டபோது கொரோனாவில் இறந்துவிட்டதாகவும், ஆஸ்பத்திரி அருகே தகனம் செய்துவிட்டதாகவும் கூறினார்.
அடையாளம் தெரிந்தது
இந்த நிலையில் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய போலீசார், அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது புவனேஸ்வரியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி வீட்டில் கொலை செய்து உடலை மருத்துவமனையின் வளாகத்தில் எரித்தது தெரியவந்தது.
புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து உடலை சூட்கேசில் எடுத்து வந்து அங்கு தீவைத்து எரித்தது தெரியவந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
போலீசார் விசாரணையில் ஸ்ரீகாந்த் ரெட்டி நாடகம் அம்பலமானது. அவரை தேடி வருகிறார்கள்.