கண்ணாயிரத்தை வழிமறித்த பாம்பு/ நகைச்சுவை சிறுகதை
1 min read
The snake strayed on kannayiram way/ comedy short story
23/7/2021
பவுர்ணமி பூஜைக்கு சென்ற கண்ணாயிரம் கையில் வெள்ளைநிற சேவலுடன் நடந்துசென்றார். அப்போது சேவல் கத்தியது. உடனே கோடாங்கி சத்தம் போட்டார். கோழி கத்தாமல் பார்த்துக்கொள்ளும்படி கண்ணாயிரத்தை எச்சரித்தார்.
உடனே கண்ணாயிரம் கோழியின் கழுத்தை பிடித்து அழுத்தினார். அது சத்தம் போடவில்லை.
சத்தம் வராததால் சந்தேகம் அடைந்த கோடாங்கி கண்ணாயிரத்திடம் கோழியை என்ன செய்தாய் என்று கேட்டார். அதற்கு அவர் கோழியை கழுத்தை பிடித்துஅழுத்தினேன். சத்தம் இல்லை என்றார்.
கோழி உயிரோடுஇருக்கிறதா பார் என்றார் கோடாங்கி. உடனே கண்ணாயிரம் அந்த கோழியை கீழேபோட்டு பார்த்தார். அதுமயக்கம்அடைந்திருப்பது தெரிந்தது. உடனே கோழி மயக்கமாயிட்டது என்று கத்தினார்.
அடப்பாவி, கோழியை இப்படி பண்ணிட்டியே என்று கோடாங்கி சத்தம் போட்டார். கண்ணாயிரம் வீட்டில் மோகினி தட்டிவிட்ட செம்பில் இருந்த மீதி தண்ணீரை எடுத்து சேவக்கோழி முகத்தில்தெளித்தார். அது மயக்கம் தெளிந்து படக்குன்னு எழுந்து நின்றது. கண்ணாயிரத்தை ஒருபார்வை பார்த்தது. தீப்பந்த வெளிச்சத்தில்சேவக்கோழி கோபத்தில் இருப்பது தெரியவந்தது. கழுத்தை ஒரு ஆட்டுஆட்டிவிட்டு கொக்கரக்கோகோ என்று கூவியது. நின்ற இடத்தில் சுற்றிசுற்றிவந்தது. அதைபார்த்ததும் கண்ணாயிரத்துக்கு தலைசுற்றியது. கோடாங்கி சேவக்கோழியின் கழுத்தை தடவிகொடுத்தார். பின்னர் சேவக்கோழியை பிடித்துதன் பெரிய பைக்குள் போட்டுக்கொண்டார்.
அது அமைதியாக படுத்து கொண்டது. கண்ணாயிரம் பலமாக யோசித்தார். கோடாங்கி பைக்குள் உள்ள பொருட்களை கோழி நின்றுவிடாதா என்று நினைத்தார். கோடாங்கியிடம் கேட்டார். கோடாங்கி சத்தம் போடாதே சேவக்கோழி வாயைகட்டியாச்சு. என்றார்.
கண்ணாயிரம் அய்யோ கயிறுவைச்சு கட்டிபுட்டியளா என்று அலறினார். கோடாங்கி கோபத்துடன் கண்ணாயிரத்தைகண்டித்தார். கயிறுவைச்சு கட்டல மந்திரத்தால வாயைகட்டிப்புட்டேன். உனக்கும் வாயை கட்டவா என்றார். கண்ணாயிரம் ம்.. வேண்டாம் நான் அமைதியாக வர்றேன் என்றார். கையை ஆட்டிக்கொண்டு நடந்தார்.
பானையை தூக்கிக்கொண்டுநடந்த வாலிபர் அண்ண தலை வலிக்குது பானையை கொஞ்சம் தூக்கிக்கொண்டு வருகிறீர்களா என்று கேட்டான்.
கண்ணாயிரம் டேய்நான் செருப்பு படாமல் வருகிறேன். தீடிரென்றுகாலில் முள்குத்துச்சுன்னா என்ன பண்ணமுடியும்.பானையை கீழேவைக்கனும் முள்ள புடுங்கணும். ரத்தம் வரும் நடக்கமுடியுமா யோசித்துபார் என்றார்.
அந்த வாலிபர் உடனேகண்ணாயிரம் அண்ண செருப்பு போடலையா என்றுகேட்டார். ஆமாண்டா என்றார் கண்ணாயிரம் சரிபார்த்து வாங்க என்றான். சிறிது தூரம் சென்றதும் கண்ணாயிரம் காலில் முள்குத்தியது. ஆ.. என்று கத்தினார். என்ன ஆச்சு.. என்று கேட்டார் கோடாங்கி.
கண்ணாயிரம் முள் குத்திட்டு என்றார். என்னய்யா முள்ளபிடுங்கி போட்டுட்டு வாங்க பனிரெண்டுமணிக்குள்ளே அங்கே போகணும் என்றார். சரிஎன்றுகண்ணாயிரம் தலையைஆட்டினார். கீழே அமர்ந்து காலில் குத்தியமுள்ளேபிடுங்கினார். ரத்தம் கசிந்தது. ஆ.. ரத்தம் என்று கத்தினார்.
கோடாங்கி முகத்தை சுழித்தார். கண்ணாயிரம் நொண்டிக்கொண்டே நடந்து வந்தார்.வாலிபரை பார்த்துநீபார்த்து நட பானையைகீழே போட்டுவிடாதே என்றார். வாலிபர் சரி என்று கூறினார். பின்னர் ஒத்தையடிபாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
அப்போது பாதையில் நல்லபாம்பு ஒன்று எலியைபிடித்து் விழுங்க முயற்சித்தது. எலி தப்ப முயன்று குரல் கொடுத்தது. கோடாங்கியின் தீபந்த ஒளியில் அது பளிச்சென்று மின்னியது. கோடாங்கி கண்ணாயிரம் மற்றும் வாலிபரிடம் சத்தம் போடாதீங்க பாம்பு இருக்கு. நாம் வேறுபாதையில் போவோம் என்றார். பாம்பை பார்த்த கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. காலில் வேறு செருப்பு போடவில்லை. மாற்று பாதையில் என்னஎன்ன இருக்கோ என்று பயந்தார்.
அவரது கண்ணில் நல்ல பாம்பு உன்னை விடமாட்டேன் என்பது போல் பயமுறுத்தி யது . வாலிபரிடம் டேய், எனக்கு உன் செருப்ப கொடுடா என்று கேட்டார். அவன் கொடுக்க மாட்டேன் என்றான். கண்ணாயிரம் பயத்தில் கோடாங்கியிடம் உங்கள் கையில் உள்ள கம்பை கொடுங்கள் என்றார். கோடாங்கி அவரை முறைத்தார்.
நான்பாம்பை விரட்டிவிடுகிறேன். இந்த வழியாகவே போவோம் என்றார். கண்ணாயிரம் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்து கொண்டார். பொங்கல் பானையைதலையில் வைத்திருந்த வாலிபர் எப்படி ஓடுவது என்றுதெரியாமல் விழி பிதுங்கிநின்றார். கோடாங்கி கையிலிருந்த கம்பால் நல்ல பாம்பை அடிக்கமுயன்றார். ஆனால் குறி தப்பியது. கோடாங்கியை நோக்கி பாம்பு சீறி பாய்ந்தது. கோடாங்கி திருப்பி கம்பால் பாம்பை அடிக்கமுயன்றார். பாம்பு அந்த கம்பில் சுற்றியது. உடனே கோடாங்கி கம்பை போட்டு விட்டு ஓட்டம்பிடித்தார்.
- வே. தபசுக்குமார். புதுவை