May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு பிராந்தியம்: அமித்ஷா பேச்சு

1 min read

Northeast Region in the Development of India: Amitsha Speech

25.7.2021
இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு பிராந்தியத்தின் பங்களிப்பை அதிகரிக்க விரும்புகிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசுமுறைப்பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் கவுகாத்தி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வடகிழக்கு பகுதியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்பட்டதில்லை. தற்போது மோடி அமைச்சரவையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு பகுதியும் இடம் பெற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.

பா.ஜ.கட்சி வடகிழக்கு பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் பா.ஜ. இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மாநிலத்தில் தீவிரவாதத்தை நிரந்தரமாக அகற்றி விட்டு வளர்ச்சியை உருவாக்க வேண்டிய காலம் இது.
இவ்வாறு அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.