இந்தியாவில் மேலும் 29,689 பேருக்கு கொரோனா; 415 பேர் சாவு
1 min readCorona for a further 29,689 in India; 415 deaths
27.7.2021
இந்தியாவில் மேலும் 29,689 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 415 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 29,689 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 3 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரமாக பதிவானது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 42,363 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 06 லட்சத்து 21 ஆயிரத்தை தாண்டியது.
தற்போது 3.98 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 415 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.39 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.27 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (ஜூலை 27) காலை 8 மணி நிலவரப்படி 44.19 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 67,16,394 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 27-ம் தேதி) காலை 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றால் 19 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 லட்சத்து 83 ஆயிரத்து 291 பேர் பலியாகினர். 17 கோடியே 72 லட்சத்து 23 ஆயிரத்து 145 பேர் மீண்டனர்.