May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா; 29 பேர் சாவு

1 min read

Corona for 1,756 people in Tamil Nadu today; 29 deaths

28.7.2021
தமிழகத்தில் இன்று 1,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் இன்றும் சற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,53,805 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,005 பேர் ஆண்கள், 751 பேர் பெண்கள்.

தமிழகத்தில் இன்று 2,394பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,98,289 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 29 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,995 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை

கோவையில் 179 பேருக்கும், சென்னையில் 164 பேருக்கும், ஈரோட்டில் 140 பேருக்கும், செங்கல்பட்டில் 117 பேருக்கும், சேலத்தில் 92 பேருக்கும், நெல்லையில் 23 பேருக்கும், தென்காசியில் 18 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று உயிரிழப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.