May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது இன்னும் ஒரு வாரத்தில் விசாரணை

1 min read

Pegasus spying case to be heard in a week

30.7.2021
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்டு முதல்வாரத்தில் விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

பெகாசஸ் உளவு விசாரணை

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ உளவுச் செயலியின் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெளியான முதல் 300 பேர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

பெகாசஸ் செல்போன் உளவு விவாகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. செல்போன் ஒட்டு கேட்பு சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல் என்றும், மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தன. இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று ஏற்கனவே கேரள மாநில எம்.பி. எம்.எல்.சர்மா உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

ஆகஸ்டு முதல் வாரம்

இந்த நிலையில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்டு முதல்வாரத்தில் (இன்னும் ஒரு வாரத்தில்) விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.