May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 42,909 பேருக்கு கொரோனா்; 380 பேர் பலி

1 min read

Corona for a further 42,909 in India; 380 killed

30/8/2021-

இந்தியாவில் மேலும் 42,909 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளனர். 380 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 34,763 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 23 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.76 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

380 பேர் பலி

நேற்று 380 பேர் கொரேனாவுக்கு பலியானார்கள். இதனை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,38,210 ஆனது.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.51 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.15 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி

இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 30) காலை 8 மணி நிலவரப்படி 63.43 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 31,14,696 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக பாதிப்பு

இன்று (30-ம் தேதி) காலை 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றால் 21 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சத்து 15 ஆயிரத்து 053 பேர் பலியாகினர். 19 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 330 பேர் மீண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.