ஒசூர் திமுக எம்.எல்.ஏ.மகன் உள்பட 7 பேர் விபத்தில் பலி
1 min readSeven people, including the son-in-law of a Hosur DMK MLA, were killed in an accident
31.8.2021
பெங்களூரு அருகே நடந்த விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
விபத்து
ஒசூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரகாஷ். இவரது மகன் கருணாசாகர். இவ உள்பட 7 பேர் பெங்களூருக்கு சொகுசு காரில் சென்றுள்ளனர். அந்த 7 பேரில் 3 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள்
கர்நாடககாவில் கருணாசாகருக்கு நிறைய பிஸினஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்த போது, நடைபாதை காட்டன் டிவைடரில் மோதியது. இதனால் நிலை தடுமாறிய கார், அருகில் உள்ள கட்டித்திலும் மோதிய நொறுங்கியது. இதனால் அந்த கார், முற்றிலும் சேதமடைந்தது.
7 பேர் சாவு
இந்த விபத்தல் காரில் பயணித்த ஒசூர் எம்.எல்.ஏ., பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
இறந்தவர்கள் பெயர் விவரம்
முதற்கட்ட விசாரணையில், காரின் முன் சீட்டில் 3 பேரும், பின் சீட்டில் 4 பேரும் அமர்ந்திருந்து தெரியவந்துள்ளது. இறந்த அனைவருமே 20 முதல் 30 வயதுடைய நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் விபரம் வருமாறு:-
ஓசூரைச் சேர்ந்த கருணாசாகர்,, கேரளாவில் பிறந்த அக்ஷய் கோயல், இஷிதா (21), தனுஷா (21), ஹூப்ளியைச் சேர்ந்த ரோஹித், அரியானாவைச் சேர்ந்த உத்சவ்.
இறந்த 7 பேரின் உடல்கள் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
7 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இறந்தவர்களில் சிலர் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஜோலோ ஸ்டே பிஜியில் வசித்து வந்தனர்.
இந்த விபத்து வழக்கை ஆதோக்தி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை செய்து வருகின்றனர்.