இந்தியாவில் மேலும் 42,766 பேருக்கு கொரோனா; 308 பேர் சாவு
1 min read
Corona for another 42,766 in India; 308 deaths
5.9.2021
இந்தியாவில் மேலும் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 308 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இதில் கேரளாவில் மட்டும் 29,682 பேர்) இதன்மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,88,673 ஆக அதிகரித்துள்ளது.
308 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 308 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,40,533 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 38,091 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,38,092 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.42 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,10,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 68.46 கோடி பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71,61,760 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.