June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நெடுஞ்சாலைகளில் போர் விமானம் தரையிறங்க ஒத்திகை

1 min read

Warplane rehearsal to land on highways

7.9.2021
ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கும் ஒத்திகை இந்த வாரம் நடைபெறுகிறது.

போர்விமானங்கள்

போர் விமானங்களை அவசர காலங்களில் சாலைகளில் தரையிறக்குவதற்காக நாடு முழுவதும் 12 பாதைகளை ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது. இதற்காக விமானப்படையினருடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறது.

இதில் ராஜஸ்தானின் பார்மரில் 3½ கி.மீ. தொலைவுக்கு உருவாக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்று தொடக்க விழாவுக்கு தயாராகி உள்ளது.
இந்த சாலை இந்த வாரம் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை ஒன்றிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்க உள்ளனர்.

ஒத்திகை

இதையொட்டி இந்த சாலையில் போர் விமானத்தை அவசரமாக தரையிறக்கி ஒத்திகை பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக, மேற்படி மந்திரிகள் இருவருடனே விமானப்படை விமானம் ஒன்று இந்த சாலையில் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
முன்னதாக லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு போர் விமானம் ஒன்றை தரையிறக்கி ஒத்திகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *