April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா; 21 பேர் சாவு தொற்று

1 min read

Corona for 1,596 people in Tamil Nadu today; 21 people died of the infection

9.9.2021

தமிழகத்தில் இன்ற 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 21 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவால் 21 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் இன்று 1,534 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,77,646 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 16,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,60,195 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

கோவை – 224, சென்னை – 186, ஈரோடு – 130, செங்கல்பட்டு – 108, தஞ்சாவூர் – 92

நெல்லையில் இன்று 9 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்க்குடயில் 7 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.