May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா; 17 பேர் சாவு

1 min read

Corona for 1,630 people in Tamil Nadu today; 17 deaths

28.9.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,657 -ல் இருந்து 1,630 ஆக சற்று குறைந்துள்ளது. 17 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,643 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் 1,50,725 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 1,629 பேரும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரையும் சேர்த்து 1,630 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,60,553 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 932 பேர் ஆண்கள், 698 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 1,643 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,07,796 ஆக உயர்ந்துள்ளது.

17 பேர் சாவு

இன்று 17 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,526 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக இருந்த நிலையில் இன்று (28ம் தேதி) 184ஆக குறைந்துள்ளது.

கோவையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 121 பேருக்கும், செங்கல்பட்டில் 117 பேருக்கும், தஞ்சையில் 90 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லையில் இன்று 24 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.