May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

1 min read

Schools open for grades 1 to 8 from November 1st

28.9.2021

தமிழகத்தில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

எனினும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து வந்தார்.

1-ம் வகுப்பு

இந்த நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.