May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பாதிப்பால் இறந்த காதல் மனைவிக்கு கோவில்

1 min read

Temple for the loving wife who died of corona infection

28.9.2021

இந்தியாவில் ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக கட்டிய பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் அவற்றில் மிகவும் புகழ்பெற்றது.

அத்தகைய ஆண்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தின் ஷாஜபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து உள்ளார்.

அவர் தனது மறைந்த அன்பு மனைவிக்கு ஒரு கோவிலைக் கட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் நினைவாக நினைவுச் சின்னம் அமைத்து அவர் வழிபட்டு வருகிறார்

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபுர் மாவட்டம் ஷாஜபூரில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர் இவரது மனைவி கீதாபாய்.

கொரோனா பாதிப்பு 2-வது அலையில் அவரது மனைவி கீதாபாய் இறந்த பிறகு, நாராயண் சிங் ரத்தோர் அவரது நினைவாக ஒரு கோவிலைக் கட்டியுள்ளார்.

மனைவியின் பிரிவை ஏற்க முடியாத நாராயண் சிங், அவரது உருவிலான சிலை நிறுவி நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.

கோவிலில் கீதாபாய் சிலையை அமைப்பதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் அனைத்து சடங்குகளையும் செய்தனர். இப்போது, அவர்கள் தினமும் சிலையை வணங்குகிறார்கள். அவர்கள் வழக்கமாக மாலையில் சடங்குகளைச் செய்கிறார்கள். ரத்தோரின் மூத்த மகன் லக்கி, அவர்களின் தாய் தங்களைச் சுற்றி இருக்கிறார் என்ற உணர்வைத் தருகிறது என கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.