தீவிர புயலாக மாறும் ‘ஷாகீன்;தமிழகத்திற்கு அதி கன மழைக்கு வாய்ப்பு
1 min readShakeen: Chance of heavy rain for Tamil Nadu
2.10.2021
அரபிக் கடலில் உருவாகியுள்ள ஷாகீன் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 4-ந் தேதி வரை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:-
அரபிக் கடலில் உருவான ‘ஷாகீன்’ புயல், நேற்று காலை 5:30 மணி நிலவரப்படி, குஜராத்தின் தேவபூமி துவாரகாவில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 400 கி.மீ., தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து தெற்கு, தென்மேற்கே 260 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது இன்று தீவிர புயலாக மாறுகிறது.
இதனால், மீனவர்கள் அக்டோபர் 4ம் தேதி வரை வட அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லக் கூடாது.
தமிழ்நாட்டில் மழை
புயல் காரணமாக மேற்கு வங்கம், சிக்கிம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.