மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
1 min read
Life sentence for man who bites wife to death
13.10.2021
பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் கணவன் சூரஜ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா. இவரது கணவர் சூரஜ் அடூரை சேர்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டு மே 7-ம் தேதி தாய் வீட்டில் மாடி ஏ.சி., அறையில் தூங்கி கொண்டிருந்த உத்ரா பாம்பு கடித்து இறந்தார். உறவினர்களுக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சூரஜ்ஜிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சூரஜ், பாம்பு வழங்கிய சுரேஷ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய சுரேஷ், மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை கொல்ல வேண்டும் என்று கூறி சூரஜ் பாம்பை வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்தார். பாம்பு வேகமாக கடிப்பதற்காக அதை ஏழு நாள் பட்டினி போட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உட்பட 288 ஆதாரங்கள், 40 பொருட்கள், 87 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆயுள் தண்டனை
இதனையடுத்து கடந்த 11-ந் தேதி கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூரஜ், குற்றவாளி என நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்தார். அவரின் தண்டனை விவரங்களை இன்று வெளியிட்ட நீதிமன்றம், குற்றவாளி சூரஜ்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.