தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
1 min read5 days chance of heavy rain in Tamil Nadu
24.10.2021
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். வேலூர், ராணிப்பேட்டை, திருபத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டில் கனமழை பெய்யும். புதுகோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 10, பெரியாறு, சின்னக்கல்லாறு பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை, அமராவதி அணை தலா 6, தாராபுரம், கீழ்பெண்ணாத்தூர், கொடைக்கானலில் தலா 5. செ.மீ மழை பதிவாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை சிந்தாரிபேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் , கோடம்பாக்கம், கிண்டி, அடையார், புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், பம்பல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.