இந்தியாவில் மேலும் 14,306 பேருக்கு கொரோனா; 443 பேர் பலி
1 min readCorona for a further 14,306 people in India; 443 killed
25/10/2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 15 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. இன்று காலை பதிவான தகவல்படி புதிதாக 14,306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இதன்படி நேற்று 15,906 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,306 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணிவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 306 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 8,538 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,89,774 ஆக அதிகரித்துள்ளது.
443 பேர் பலி
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,54,712 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது. ஒரு நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 18,762 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,67,367 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.18 சதவீதமாக உள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,67,695 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,02,27,12,895 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,30,720 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.